(Reading time: 18 - 35 minutes)

"ன்னுடைய இந்த சம்மதத்தை நானே நேரா அவருக்கிட்ட சொல்ற வரைக்கும் நீ இதை யாருக்கும் சொல்ல கூடாது. என் மேல ப்ராமிஸ். அடுத்து நான் கம்மிங் சாட்டர்டே வீட்டுக்கு வரேன். அவர் கூட நான் தனியா பேசணும் அதுக்கு நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். அது வரைக்கும் எனக்கு அவருடைய போன் நம்பர் கூட வேண்டாம்.சரியா " -மது

"டேய் பாவம்டா அவன் ஏற்கனவே நீ போட்ட ஒன் இயர் கண்டிசன்ல நொந்துருக்கான். இப்போ என்கிட்டே இப்படி ப்ராமிஸ் வேற பண்ண சொல்லறியே. சரி பரவாலை. ஒன்இயர்க்கு பதிலா இப்போ ஒன் வீக் தான. நான் சொல்லலை. நெக்ஸ்ட் வீக் நீ வீட்டுக்கு வரும்போது அய்யா செம்ம பிளானோட காத்திருப்பேன். அப்பறம் குட்டிமா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் " -சரண்

"என்ன நீயும் யாரையாவது லவ் பண்றியா " - மது

"என் மதுகுட்டினா மதுகுட்டிதான். ரொம்ப சரியா சொன்னடா. நானும் ஒரு பொண்ணை லவ் பண்றேன்." -சரண்

"என்னது..........!!!!!!!!!! " -மது

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"ஹ்ம்ம் ஆமா மது. நான் ஒரு பொண்ணை மனதார நேசிக்கிறேன். " -சரண்

"அடப்பாவி அண்ணா நான் என் மேட்டரை சொன்னதால தான நீ இப்போ சொல்லற. இல்லேன்னா சொல்லிருக்க மாட்டில. "-மது

"அப்படி எல்லாம் இல்லைடா மது. என்னதான் நான் லவ் பண்ணுனாலும் அந்த பொண்ணு சம்மதம் இல்லாம அதை வேற யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு நெனச்சேன். அதனால தான் சொல்லலை. " -சரண்

"ஓஹ்ஹோ இப்போ சாருக்கு அந்த பொண்ணுடைய அனுமதியும் சம்மதமும் கெடைசிருச்சொ" - மது

"ஹ்ம்ம் ஆமா மது மறுபடியும் கரெக்டா சொல்லிட்ட. " -சரண்

"என்னது... என்னப்பா ஒரே அதிர்ச்சி மேல அதிர்ச்சியா இருக்கே. சரி எங்க அண்ணியார் யாரென்று சொல்ல முடியுமா " -மது

"சொல்றேண்ட. ஆனா நீ ஷாக் ஆயிடாத. "-சரண்

"ஆமா நீ இத்தன நேரம் கொடுத்த அதிர்ச்சிய விடவா இப்போ பெரிய அதிர்ச்சி கொடுக்க போற. சொல்லு சொல்லு. " -மது

"அவ பேரு திவ்யா டா. " -சரண்

"அட என் பிரெண்டு பெரும் திவ்யா தான். பேரு எனக்கு பிடிச்சிருக்கு. வேற டிட்டயில்ஸ் எல்லாம் சொல்லு" -மது

"பேரு மட்டும் உன் பிரெண்டுது இல்லடா. ஆளும் உன் பிரெண்டு தான் " -சரண்

"என்னாது ??????? " என்று மது அலறிய அலறலில் எங்கே போனை தாண்டி அவளின் குரல் வெளியே இருக்கும் தன குடும்பத்தினருக்கு கேட்டு விடுமோ என்று சரண் ஒரு நிமிடம் திகைக்க, அது வரை குளியலறையில் பாட்டு பாடிகொண்டே குளித்து கொண்டிருந்த திவ்யா மதுவின் அலறலை கேட்டு கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி "என்னாச்சு மது ஏன் கத்தற காக்ரோச்சா ? " என்று கேட்க, திவ்யாவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், "ஹ்ம்ம் நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா அதுக்குள்ள எனக்கு இங்க முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்கு " என்று கூறியவள், சரணிடம் "ஹ்ம்ம் நான் தான் சரியான ஓட்டை வாயி டமாரம். எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியறேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் இருக்கிங்களே. உங்களை..." என்று  நம்பியார் போல பேச,

சரணோ, "ஐயோ மதும்மா பாவம் டா திவ்யா நீ அவளை ஒண்ணும் சொல்லாத. தப்பெல்லாம் என் மேல தான். " என்று திவ்யாவை காப்பாற்ற முயல, "உன்னை மன்னிச்சாலும் மன்னிப்பேன் அவளுக்கு நோ மன்னிப்பு. நீ இப்போ போனை கட் பண்ணிட்டு எனக்கு எப்படி நல்ல ஐடியா தரலாம்னு போயி யோசி. " என்று கால் டிஸ்கனெக்ட் செய்தவள், திவ்யா வெளியே வரட்டும் என்று காத்திருந்தாள்.

தலையை துவட்டியவாறே வெளியே வந்த திவ்யா, "ஏண்டி அப்படி கத்துன. நானே என்னமோ ஏதோனு பயந்துட்டேன். " என்க, "ஆமாம் நீ எப்பவும் அஞ்சு நிமிஷத்துல குளிச்சிருவியே இன்னைக்கு என்ன மேடம் 45 மினிட்ஸ் ஆயிருக்கு வெளிய வர. என்ன விசேஷம்? முகம் எல்லாம் பளபளன்னு இருக்கு. எனிதிங் ஸ்பெசல்?" என்று மது கேட்க, விஷயத்தை எப்படி சொல்வது மதுவிடம், சொன்னால் தவறாக எண்ணிவிடுவாளோ என்று பயந்த திவ்யா, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எங்க மொகமெல்லாம் எப்பவுமே இப்படி தான் " என்று கூறியபடி பால்கனி நோக்கி செல்ல,

"அப்போ மேடம் என்ன கேட்டாலும் உண்மையை சொல்ல போறது இல்லை அப்படிதானே."  என்ற மதுவின் கேள்விக்கு, சிறிது தடுமாறினாலும் "என்ன உண்மை ?" என்று புரியாதவள் போல கேட்க,

"சரி. நானே நேரடியா கேட்கிறான். உனக்கு என்ன தகுதி இருக்குன்னு எங்க அண்ணனை லவ் பண்ற. " என்று மது கேட்க , எந்த கேள்வியை தன் தோழியின் வீட்டினர் கேட்டு விடுவார்கள் என்று பயந்து தன காதலை மறைக்க முயன்றாளோ இன்று அதே கேள்வியை தன் தோழி கேட்க  கொஞ்சம் இல்லை நிறையவே ஆடிப்போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.