"சார்??"
"எல்லா அப்பாயிண்ட்மண்ட்டையும் கேன்சல் பண்ணுங்க!நாளைக்கு பார்த்துக்கலாம்!"
"ஆனா..சார்!!"
"சொன்னதை செய்ங்க..எதிர்த்து கேள்வி கேட்காதீங்க!"-கடுமையாக அவன் கூற,பேச்சிழந்து.தலையசைத்தான் வினோத்.
தனது கைப்பேசியை எடுத்து வீட்டிற்கு அழைப்பு விடுத்தான்.
"ஹலோ!"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
"சிவா என்ன பண்றா?"
"தூங்கிட்டு இருக்காங்க!"
"நான் டாக்டரை வர சொல்றேன்!அவளுக்கு என்னன்னு பார்க்க சொல்லு!"
"சரிங்க..."-இணைப்பைத் துண்டித்தான் அவன்.மனம் முழுக்க தங்கையை குறித்த கவலை மட்டுமே நிறைந்திருந்தது.
"சிவாம்மா!டாக்டர் வந்திருக்காரு!"
"யார் வர சொன்னா?"
"உங்க அண்ணன் தான்!"
"ஐயோ!எனக்கு ஒண்ணுமில்லை..."
"மன்னிக்கணும்!அதை நான் சொல்லணும்!"-என்றப்படி உள்ளே நுழைந்தார் சூர்ய பிரகாஷ்.
"என்ன குட்டி!என்ன ஆச்சு?ஆப்ரேஷன் முடிச்சிட்டு வெளியே வரேன் உங்கண்ணன் போன் பண்ணிட்டான்.நீ என்னமோ சீரியஸா இருக்கிற மாதிரி அப்படி அலறினான்.இங்கே வந்து பார்த்தா கூலா உட்கார்ந்து இருக்க!என்ன விஷயம்?"
"ஒண்ணுமில்லை அங்கிள்..சாதாரண தலைவலி!"
"தலைவலியா?உனக்கா?வாய்ப்பில்லையே..!அப்படி என்ன உன்னை டிஸ்டர்ப் பண்ணிடுச்சு?"
"க்ளைமட் செட் ஆகலை அங்கிள்!வழக்கமா சம்மர்ல வர வலி தான்!"
"ம்...என்னமோ சொல்ற!சரி..ஒரு இன்ஜக்ஷன் போட்டா அழுவியா?"
"ம்..."
"சரி...டேப்லட்ஸ் மட்டும் தரேன்!தூக்கி வெளியே போடாம,தலைவலிக்கும் போது போட்டுக்கோ!"
"சரிங்க அங்கிள்!!"-சூர்ய பிரகாஷ் சில மருந்துகளை தந்துவிட்டு கிளம்பினார்.
"அண்ணா எதுக்கு இப்படி பண்றாரு?நான் தான் எனக்கு எதுவுமில்லைன்னு சொன்னேன்ல!"
"இங்கே பாருங்கம்மா..எதுக்கு இப்போ கோபப்படுறீங்க?"
"பின்ன என்ன லட்சுமி.."
"எனக்கு தெரியும் நீங்க இப்படி இருக்க காரணம் வேறன்னு!அவருக்கு தெரியணுமே!"
".................."
"நீங்களும் எத்தனை நாள் மறைப்பீங்க?உண்மை என்னிக்காவது வெளி வரணுமே!"
"நான் எப்படி லட்சுமி அண்ணாக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லுவேன்?"
"அப்படின்னா...இன்னும் எத்தனை நாள் மறைக்க போறீங்க?உங்க வாழ்க்கை...பார்த்துக்கோங்க!அப்பறம்,நீங்க தான் கஷ்டப்படணும்!"-அறிவுறுத்திவிட்டு லட்சுமி எழுந்து சென்றாள்.
சற்று தெளிந்த மனம் மீண்டும் குழம்பிப்போக கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்துக் கொண்டாள்.
தொடரும்
{kunena_discuss:991}