அடுத்த வாரம் அவள் செல்லும் போது அவள் தங்கைகளின் கணவன்மார்கள் வந்திருக்க, அவர்கள் இருவரும் அவர்களோடு இருக்க வேண்டியதாயிற்று. பிரயுவின் பெற்றோரும் அவர்கள் மாப்பிள்ளைகளை கவனிக்க வேண்டியிருக்க, ப்ரயு அங்கே தனிமையாக உணர ஆரம்பித்தாள்.
அவளுக்கு எல்லாம் புரிந்தாலும், அந்த தனிமை உணர்வை அகற்ற முடியவில்லை. அதிலிருந்து அவள் தங்கள் பெறோர் வீட்டிற்கும் செல்வதில்லை.
அவர்கள் மசக்கை முடிந்து சென்றிருந்தாலும் கூட, இவள் வரும் ஞாயிறு அன்று தான் அவர்களும் வருவார்கள். அவள் மனதிற்குள் ஒரு பயம், தன்னுடைய எண்ணங்கள் அவர்களை தாக்கிவிடுமோ என்று. அதனால் இவள் அங்கே செல்வதை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள்.
இதை அவள் யாரிடமும் சொல்ல வில்லை. எப்போதும் போல் மனதில் வைத்து வேதனை பட்டாள். ஏனோ ஆதிக்கும் இப்போது எல்லாம் பிரயுவின் முகத்தை பார்த்து ஏதோ தோன்றியது. அவனுக்கு என்ன என்று புரியவில்லை. அவன் கேட்டதற்கும் மறுத்து விட்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
மேலும் நான்கு மாதங்கள் கடந்திருக்க, வித்யாவின் குழந்தைக்கும் கிட்ட தட்ட ஏழு மாதங்கள் முடிந்திருக்க, குழந்தைக்கு காது குத்தும் function வைக்க விரும்பினர்.
ஒற்றைப்படை மாசமாக இருக்க வேண்டும் என்பதால் அந்த மாதம் வைக்கலாமா என்று ஆதியின் வசதியை கேட்க, அவனும் அந்த மாத கடைசியில் வருவதாக தெரிவித்து இருந்தான்.
வெளிநாட்டில் இருந்து வருவது என்றால் சும்மாவா ? நெருங்கிய உறவினருக்கு அங்கே உள்ள நல்ல பொருட்களாக வாங்க வேண்டும். friends மற்றும் கொஞ்சம் வேண்டியவருக்கு எதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவருக்கு சாக்லேட் ஆவது வாங்க வேண்டும்.
அவன் ஒருபக்கம் ஷாப்பிங் என்றும், இன்னொரு பக்கம் அவன் வேலை பார்க்கும் நிறுவனமோ, பதினைந்து நாள் லீவ் கொடுத்து விட்டு, அங்கேயே மூன்று நாட்கள் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு தேவையானதை தயார் செய்து வைக்க வேண்டியிருந்தது.
ஆதியின் மனதில் இந்த முறை கட்டாயம் பிரயுவோடு தனியாக எங்காவது சென்று வர வேண்டும் என்று இங்கிருந்தே மூனார் செல்ல டிக்கெட் புக் செய்திருந்தான். சுற்றி பார்க்க வேண்டும் என்பதை விட, ப்ரயு நினைச்ச நேரம் தூங்கி, எழ, தடையில்லாமல் தன்னோடு செலவு செய்ய என்று யோசித்து ஏற்பாடு செய்திருந்தான்.
இங்கே பிரயுவோ விஷேசத்திற்கு தேவையானதை வாங்கி வைப்பது, ஆதிக்கு பிடித்ததை செய்து கொடுக்க வேண்டிய சாமான்களை வாங்கி வைப்பது என்று பிஸி ஆக இருந்தாள்.
இந்த முறை ஆதி கட்டாயம் வருவான் என்று அவளுக்கு தோன்றியது. அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை என்பதால் அவன் வரவை ஆவலோடு எதிர் பார்த்து இருந்தாள்.
இவர்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க, செவ்வாய் கிழமை நாள் பார்த்து இருக்க, ஆதி ஞாயிறு வருவதாக இருந்தது.
ஞாயிறு ரெஸ்ட் எடுத்து விட்டு, திங்கள் மதியம் வித்யா கணவர் சொந்த ஊருக்கு செல்ல van ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆனால் ஆதி வரும் flight 5 மணி நேரம் தாமதமாக வர, அவன் சென்னை ஏர்போர்ட் வரவே திங்கள் விடிகாலை 6 மணி ஆனது. பிறகு imigration எல்லாம் முடிந்து வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆனது.
வந்தவுடன் அவன் பிரயுவை தேட, வீட்டிலோ கிட்ட தட்ட வித்யா மாமியார், அவர்கள் உறவுக்காரர்கள் எல்லாம் சேர்த்து பதினைந்து பேர் இருந்தனர்.
எல்லோரும் இவர்கள வீட்டில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படுவதாக ஏற்பாடு. ஆதி நொந்து போய் பிரயுவை பார்த்தான்.
ஹாய் friends, எல்லோருமே ப்ரயு ரொம்ப கஷ்டபடுகிறாள் என்று வருத்தப்பட்டீங்க என்பதற்காகவும், பிந்து மாம் சொன்னதுக்காகவும், இந்த எபிசொட் இல் பிரயுவை சந்தோஷமாக காட்டி இருக்கிறேன். அதானாலே ஆதி வந்ததோட நிறுத்தி இருக்கிறேன்.. அவன் வந்த பின்னால் நடந்த விஷயங்களை அடுத்த எபிசொட் இல் பார்க்கலாம்.. வழக்கம் போல் உங்கள் கமெண்ட் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
தொடரும்
{kunena_discuss:948}