“ஆனால் மாமா! அந்த குழந்தைகளோட முகத்தில் ஒரு உயிர்ப்பு இல்லையே. சதா ஒரு அலைபாயுதல் இருக்கிறதே.”
“சரிதாம்மா! என்ன செய்யறது? நிற்கவே நேரம் இல்லாம அவங்கவங்க வாழ்க்கையை கவனிக்க ஓடிக்கிட்டேயிருக்காங்க. நின்னு அடுத்தவங்களை கவனிக்கிற நிதானம் அவங்களுக்கு இல்லை. அதற்கு நேரமும் இல்லை. வெளிநாடு மாதிரி குழந்தைகளுக்கு தனியறை ஒதுக்கிடுவாங்க.”
அவளுக்கு தனது பெற்றோர் நினைவு வந்தது.
வளர்ந்த பிறகு கூட அம்மா தரும் உருண்டை சாதத்துக்கு இருந்த ருசி நாவில் தித்தித்தது. முகத்தைப் பார்த்தே மகளின் பிரச்சினையை கண்டுகொண்டு அதைப் போக்க முயலும் பெற்றோர். கவலை வரும்போது தாயின் மடியில் தலை சாய்க்கும்போது பகலவனைக் கண்ட பனியாய் துக்கம் விலகி ஓடிவிடுமே.
<...
This story is now available on Chillzee KiMo.
...னாள். இவ உன் அக்கா. இவளை நீதான் பார்த்துக்கனும் என்று சிற்பியின் மனதில் பதிய வைத்தாள். இவன் உன் தம்பி. இவனுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சிந்தனாவின் மனதில் பதிய வைத்தாள். அவர்களிடமிருந்து விலகுவதே தெரியாமல் விலகி நின்றாள். அவர்களின் அணைப்பிற்காக ஏங்கி துடிக்கவும் செய்தாள்.