ஒருதுளி விசம் கலந்தாலும் பால் கெட்டுப்போகும்தானே. ஒரு சிறு துளியாவது அவர்களின் மனதில் வணங்காமுடி சொல்வது உண்மையாக இருக்குமோன்னு சந்தேகம் எழுந்தாலே அவர்களின் நிம்மதி கெட்டுப்போகுமே.
இதுவரைக்கும் அவர் என்ன பேசியிருக்கார் என்று தெரியாமல் தன்னைக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று மனதை தேற்றிக்கொள்ளவும் முடியவில்லை.
அதுவும் அவர்கள் தன்னிடம் நேரிலே வந்து கேட்டுவிட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் ஆனால் வாய்விட்டு கேட்காமல் அவர்களே ஆராயத் தொடங்கினால்? அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாமல் தவிக்க நேரிடுமே. ஒவ்வொரு கணமும் அவர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதா இல்லையா என்று மனதுக்குள் போராட நேரிடுமே. இதை எப்படி சரி செய்வது?
இத்தனை நாள் இருக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
் பரவுவதை அவளால் உணர முடிகிறது.
அதற்கு காரணம் அவளது அழகான முகமே என்றும் புரிகிறது. அவள் சிரித்தால் நன்றாக இருக்கும் என்று நிறைய நேரத்தில் நினைத்திருக்கிறாள். ஆனால் அவளை எப்போதும் ஒரு கலகலப்பான சூழ்நிலையில் இருந்ததில்லை. தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு தனிமையிலேயே இருக்கிறாள்.