முகம் மலர ஹாசினி சரணை நோக்கி வர,நண்பனை டீலில் விட்டு காதலியை நோக்கி சென்றான்.
அவளுடன் அவந்திகாவும் வரவே முன்னே வைத்த காலை,அப்படியே பின்னே வைத்து நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு நண்பன் அருகிலையே நின்றுகொண்டான் சரண்.
இரு பெண்களையும் நிமிர்ந்து பார்த்த யஷ்வந்த் குழம்பி போனான்.
இந்த அவந்திகாவை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே,”கொஞ்ச நேரம் பேசிட்டு இருடா”என்று பதிலை கூட எதிர்பார்க்காமல் காதலியை பைக்கில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டான் சரண்.
‘இவனை நம்பி கூட வந்தது தப்பா போச்சே’நொந்துகொண்டவன்,இந்தப் பெண்ணிடம் பேசுவதற்கு நேராக வீடு போய் சேரலாம் என்ற எண்ணம் தோன்றியது.
இந்த ஊருக்கு வந்து சில நாட்களே ஆகியிருந்ததாலும்,ஒரு காட்டுக்குள் இந்த காலேஜ் இருந்தாலும்,பேருந்து நிறுத்தம் எங்கிருக்கிறது என்று கூட அவனுக்கு தெரியவில்லை.ஆட்டோ எதுவும் வருவது போலவும் தெரியவில்லை.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அவன் சாலையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை புரிந்துகொண்ட அவந்திகா,”இங்க இருந்து ஆட்டோல போனா பஸ் ஸ்டான்ட் போக லேட் ஆகும்.அதே நடந்து போனா சீக்கிரமா போயிடலாம்”என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் பறந்துவிட,
“என்னது”என்று குழம்பிப் போனவன்,அதெப்படி ஆட்டோல போனா லேட் ஆகும் என்று யோசிக்க ஆரம்பித்த தன்னுடைய மூளையையே கொட்டி,தன்னை முட்டாள்த்தனமாக யோசிக்க வைத்த அவந்திகாவை திட்டியவனுக்கு மற்றொரு குழப்பம்.
‘இவள் அவந்திகாவா..இல்லை அன்று கோவிலில் அம்மாவை எரிச்சல் படுத்திய செவ்வந்தியா’என்று யோசித்தான்.
பின் இது தேவையில்லாத சிந்தனை என்று ஒதுக்கிவிட்டு கால் டாக்சியில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அவனுடைய அப்பா குமார்,”போன வேலை என்னடா ஆச்சு”என்று கேட்க அப்பாவை முறைத்தான்.
“ஒரு பொண்ணு கூட உனக்கு பிடிக்கலையா”என்று அவனை பார்த்து நக்கலாக கேட்க,அதே நேரம்.....”மாமா..நீங்க எங்க இருக்கீங்க”என்று யஷ்வந்தின் போனிற்கு ரிங் வர திடுக்கிட்டு போய் பார்த்தான்.
அவனது அம்மாவும்,அப்பாவும்,’இதென்னடா பாட்டு’-கேலியாக பார்க்க,திருதிருவென்று முழித்தான்.
தொடரும்
{kunena_discuss:1004}