ஜெய்யின் காரை பின் தொடர முயற்சித்த இஷானின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவே இல்லை…
அவன் இந்நேரம் எங்கு சென்றிருப்பான் என்ற எண்ணம் கூட அவன் மனதில் தோன்றியிருக்கவில்லை…
அரை மணி நேரத்திற்குப் பிறகு, ஜெய்யின் காரை காவல் நிலையத்தின் காண, விரைந்து உள்ளே சென்ற போது,
வியர்வையில் முழுதாய் நனைந்த சட்டையுடனும், கலைந்திருந்த கேசத்தை அலட்சியம் செய்தபடியும், இங்க் பண்ணியிருந்த காக்கிஉடை கசங்கலுடனும் காட்சியளிக்க, பொத்தென்று வந்து தனது சேரில் அமர்ந்தான் ஜெய்…
“டேய்………….. என்னடா இது கோலம்……..” என்ற இஷான், தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்க்க,
அங்கே காயங்களுடனும், வலிகளுடனும், சுருண்டு விழுந்து கிடந்தான் ஒருவன்… உடம்பில் அடி படாத இடமே இல்லை எனலாம்… ஆம் உயிர் மட்டும் தான் இருந்தது… வேறு எந்த உணர்ச்சியும் அவனிடத்தில் காண முடியவில்லை அப்போது…
“இன்ஸ்பெக்டர்…..” என்ற சத்தம் கேட்டு வந்தான் ஒருவன் வேகமாய்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டுட்டு போகணும்… ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க…” என கூற, அவனோ ஜெய்யை பார்த்தபடி அமைதியாக இருந்தான்…
“அவனை ஏன் பார்க்குறீங்க?.. உங்களுக்கு சுப்பீரியர் ஆஃபிசர் நானும் தான்… ஃபர்ஸ்ட் டூ வாட் ஐ சே…” என இஷான் கத்த, அவன் பயத்துடன் மீண்டும் ஜெய்யினை தான் பார்த்தான்…
“போ…” என்பது போல் ஜெய் கைகாட்ட, அந்த இன்ஸ்பெக்டரும் அடுத்து இஷான் சொன்னவற்றை செய்து முடித்தான்…
“நீயென்ன மிருகமாடா?... இந்த அடி அடிச்சிருக்க?... செத்து போயிருந்தா என்ன செஞ்சிருப்ப?..” என இஷான் கோபமாக கேட்க அவன் அமைதியாக இருந்தான்…
“ஒரு அக்யூஸ்ட் அதும் ஸ்டேஷனில் செத்து போனா உன் வேலை என்னாகும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீயா?...” என்றதும்,
“அவன் தான் சாகலையே…” என்றான் ஜெய் பல்லைக்கடித்துக்கொண்டு…
“முட்டாளாடா நீ?... உயிர் மட்டும் தான் இருக்கு அவன் உடம்புல…”
“உயிர் இருக்குல்ல, விடு….” என்றான் ஜெய் கோபம் ஆறாமலே…
“எதுக்குடா அவனை இப்படி அடிச்சிருக்குற?... நான் அவன் பண்ணினது தப்பு இல்லன்னு உங்கிட்ட………….” என சொல்லிக்கொண்டிருந்தவன், ஜெய்யின் பார்வையில் அடுத்து வார்த்தை வராது அமைதியானான்…
“தூக்கி உள்ளே வைப்பேன்னு சொன்னதுக்கு என்னை கொன்னுடுவேன்னு சொன்னான்… முடிஞ்சா செய்யுன்னு சொன்னேன்… பரதேசி… தீர்ப்பு அவனுக்கு பாதகமா வந்ததும் எனக்கு குறிவைக்காம உனக்கு வச்சிருக்கான்… அதான் உன்னைத் தேடி வந்தேன்… வந்த இடத்துல……….” என்றவனுக்குள் கோபம் எல்லை மீறி போக, ஓங்கி டேபிளின் மீது குத்தினான்…
“டேய்………….. டேய்….. என்ன காரியம்டா செய்யுற?....” என அவனின் கைகளை இஷான் பிடிக்க அவன் உதறினான்…
“தூக்கி உன்னை உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்டுறேன்னு சொன்னபடி தான் செஞ்சிருக்கேன்… என்ன ஒன்னு உயிர்ன்னு ஒன்னு மட்டும் உடம்புல இருக்கணும்னே தான் விட்டு வைச்சேன்… ஏன்னா கொன்னுட்டா மரண வலி அவனுக்கு தெரியாது பாரு.. இன்னைக்கு நீ ஒரு செகண்ட் என்றாலும் அனுபவிச்ச அந்த வலி…. அது அவனுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும்…” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியேறினான் உடனேயே…
தொடரும்
{kunena_discuss:1001}