“சரிதான்க்கா. அப்ப நம்ம பெரியவங்க நிறைய விசயங்களை நமக்கு நல்லது சம்பிரதாயம்னு சொல்லி செய்ய வச்சாங்க. நாம இப்பவும் அதோட அர்த்தம் புரியாமலே செய்துக்கிட்டும் இருக்கோம். அதே போல இப்பவும் ஏதாவது செய்து நம்ம வாழ்வாதாரத்தை காப்பாற்றனும்.”
“சரி! சரி! பேசியது போதும். சாப்பிட வாங்க.”
அன்பரசி அழைக்க அத்துடன் பேச்சு முடித்து சாப்பிட சென்றனர்.
இன்று விடுமுறையாதலால் பிள்ளைகள் நிதானமாக சாப்பிடுவார்கள் என்று அவர்களுக்குப் பிடித்ததாய் பார்த்துப் பார்த்து சமைத்திருந்தாள். அவர்கள் அதை ரசித்து உண்ணுவதை சந்தோசமுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சரியான நேரத்தில்தான் வந்திருக்கேன்.”
குரல் கேட்டு திரும்பினர். சுருதி நின்றிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...கள் சுகமாய் வாழட்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்துக்கொண்டாள்.
அதன் பிறகும் சுருதிக்கு அங்கிருந்து கிளம்பவே மனம் வரவில்லை. அவள் அன்பரசியை விட்டு நகரவே இல்லை. சிந்தனாவை அவள் பக்கத்தில் வரவிடவே இல்லை.
என்னவோ அவள் செயல் அன்பரசியை சிந்தனாவிடமிருந்து பிரித்து வைப்பதாகவே இருந்தது.