என்னவோ சிந்தனாவும் விலகியிருந்தாள். இன்று தம்பிக்குமே விடுமுறையாதலால் அவனுடன் பேச அவளுக்கு நிறைய விசயங்கள் இருந்தன.
மாலை மயங்கி இரவு கவிழும் வேளை. சுருதி கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினாள்.
“சிந்து. நீ போய் சுருதியை விட்டுவிட்டு வா. பத்திரமா வண்டியோட்டனும்.”
“இல்லம்மா. நான் தனியா போய்க்கிறேன்.”
“இல்ல சுருதி. அவளும் காலையிலிருந்து எங்கேயும் வெளியில் போகாமதான் இருக்கா. அவளுக்கும் வெளியில் வந்த மாதிரி இருக்கும். காரில்தான் உன்னைக் கொண்டு விட சொன்னேன்.”
“சரிம்மா.”
வண்டியில் ஏறி அமர்ந்ததும்
தொடர்புடையவை:<
...
This story is now available on Chillzee KiMo.
...ங்க என்ன லூசா?”
“ஆமாங்க.” அவன் சட்டென்று ஒத்துக்கொண்டான்.
“என்னது?” அவள் அதிர்ச்சியாய் கேட்டாள்.
“உங்களை பார்த்ததில் இருந்து நான் லூசாத்தான் ஆயிட்டேன்.”
அவன் சரசமாகப் பேசினான். அவளுக்குள் சில்லிட்டது.
அவள் எந்த பதிலும் சொல்லாமல் அவனையே பார்த்திருந்தாள்.