“ என்னத்தான் அத்தை,மாமா,அம்மா அப்பா இருந்தாலும், நம்ம குழந்தைகளுக்கு அம்மா வேணும் ஷக்தி”, அவள் பேச பேச அவனுக்கு கோபம் தலைக்கேறியது.. பளாரென கன்னத்தில் அறைந்தாலென்ன என்பது போல கோபம் வரவும் அவள் பக்கம் அவன் திரும்ப,கண்களில் கண்ணீர் ததும்ப பேசிக்கொண்டிருந்தாள் மித்ரா.அவளது ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் அவளின் காதலைத்தான் பறைச்சாற்றியது..அவள் பேசுவது தவறாகினும், தனக்காகத்தானே இப்படி எல்லாம் யோசிக்கிறாள் ?என்று அவளுக்காக விவாதித்தது அவன் மனம் ! அவனின் மூளையோ,” என்னத்தான் இருந்தாலும் அவள் இப்படியா பேச வேண்டும் ?” என்று குற்றம் சாட்டியது. இப்படியே அவனின் மனமும் சிந்தனையும் போட்டிபோட
“இவ வாயை இப்போ மூடி காட்டுறேன்” என்று மனதிற்குள் சூளுரைத்தபடி பேச ஆரம்பித்தான் ஷக்தி.
“ ம்ம்ம் நீ சொல்றது வெச்சு பார்த்தால், நீ போயிட்டா நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கனும் அப்படித்தானே?”
“ம்ம்”
“ ப்ச்ச்..உனக்கு தங்கச்சி கூடஇல்லையே.. நான் யாரை டீ கல்யாணம் பண்ணிப்பேன்?”
“..”
“இப்படி பண்ணலாமா?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“என்ன ?”
“ நீயே எனக்கு பொண்ணு பார்த்து வையேன்”
“ என்ன?”
“ ஆமாடீ .. உனக்குதானெ என்னை நல்லாத் தெரியும்.. அப்போ நீதான் எனக்கு ஏற்ற பொண்ணை பார்க்கனும்” என்றான் அவன் இலகுவாய். தனது பிள்ளைகளுக்கு அன்னை வேண்டுமென அவனிடம் வாதம் செய்தபோது நிதானமாய் இருந்த மித்ரா, இப்போ ஷக்தியின் மனைவியாய் இன்னொருத்தியா? என கற்பனை செய்யும்போதே கொதித்து போனாள். அவளின் கோபமான முகத்தை பார்க்க அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது..
“ வாடீ வா..உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா ? இன்னைக்கு நீயே சட்னிதான்” என்று மனதிற்குள் சிரித்தவன் தீவிரமாய்,
“ நீதான் மிது எனக்கு நல்ல பொண்ணாய் பார்க்கனும்.”
“..”
“ உனக்கு தான் நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்களே..அவங்களில் யாருக்காவது என் மேல இன்டெரஸ்ட் இருக்க?” என்று கண்ணடித்தான். பற்களை கடித்துக் கொண்டு அவனை முறைத்தாள் மித்ரா.
“ நீ இப்போவே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடு மிது.. டைம்வேஸ்ட்பண்ண் வேணாம்”என்றவன் கூறவும் மித்ராவின் கையில் அகப்பட்ட தலையணை ஷக்தியை நோக்கி பறந்து வந்தது.
“ஹேய்”
“டேய்..யாருக்கிட்ட பொண்ணு பார்க்க சொல்லுற.. அவ்வளோ திமிறா உனக்கு ? விட்டுருவேன் நினைச்சியா ? இந்த ஜென்மத்துல நாந்தான் உனக்கு.. சும்மாகனவு காணாதே..ஏதோ பாவம் சின்ன பொண்ணு எக்கு தப்பா உளறி வைக்கிறாளே..அவளுக்கு சொல்லி புரிய வைப்போம்ன்னு இல்லாமல் என்னையே உனக்கு பொண்ணு பார்த்து வைக்க சொல்லுறியா? என்ன திமிர் இருக்கனும் உனக்கு ?” என்றவாரு அவன் மார்பில்வேகமாய் குத்தினாள் மித்ரா.
“ஹேய் அத்தை பொண்ணு வலிக்கிறது டீ”
“ அத்தை பொண்ணு சொத்தை பொண்ணுன்னு கொஞ்சினால் கொன்னுடுவேன்”
“ ஹேய் அடிக்காத டீ.. நீதானே டீ சொன்ன, நான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு ?”
“சொன்னா? நான் சொன்னால் இதுதான் சான்ஸ்ன்னு சரின்னு சொல்லுவியா? கொன்னுடுவேன் உன்னை”என்று அவள் இன்னும் அவனை அடிக்கவும் அவள் கைகளை பிடித்து நிறுத்தி
“ஐ லவ் யூ”என்றான் ஷக்தி.
“ ..”
“கோபம் வந்துச்சுல ? நீ பேசுறப்போ எனக்கும் அப்படிதான் டீ இருந்தது”
“..”
“லூசா நீ ?உனக்கு ஒன்னும் ஆகாது”
“ அதில்லை”
“அப்படி ஏதும் ஆனிச்சுன்னா என் பிள்ளைங்களை நான் பார்த்துப்பேன்.. என்னை என் பொண்ணோ ,பையனோ பார்த்துப்பாங்க”
“ம்ம்”
“ வாய் பேசுறது தப்பில்ல மிது, பட் கொஞ்சம் மூளையை பயன்படுத்தனும்.. எதுக்கு இப்படி யோசிக்காம வார்த்தைய கொட்டுற?எவ்வளோ கோபம் வந்துச்சு தெரியுமா?”
“சாரி மாமா”
“ ..”
“அதான் சாரி சொல்லுறேன்ல? இனிமே சாரி கேட்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன் போதுமா?”