அதைப் பார்த்த சுந்தரத்துக்கும் உடல் சிலிர்த்தது. அவளை அனைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து 'சொல் என்ன விஷயம்?' என்று கேட்டார்
அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை, ‘ஒன்றுமில்லை’ என்றால் அவள்.
‘அப்போ இங்கேயே வெய்ட் பண்ணு, இதோ வந்துவிடுகிறேன் போய்விடாதே ‘என்றார் சுந்தரம்
அவர் உள்ளே சென்றவுடன் அவள் அந்த போட்டோவைப் பார்த்தாள், அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சுந்தரத்தின் போட்டோவைப் பார்த்து அதன் கிட்டே போய் முத்தம் கொடுத்தாள், டிரஸ் மாத்திக்கொண்டு வெளியே வந்த சுந்தரம் அதைப் பார்த்தார்.
கிட்டே வந்து அவளை பின் புரத்திலிருந்துக் கட்டிக் கொண்டு,’நான் நேரிலேயே இருக்கேன் எதுக்கு போட்டோக்கு முத்தம் கொடுக்கிறாய்? எனக்கு இங்கே கொடு' என்று கன்னத்தைக் காட்டினார்
அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள்.' என்னை விடுங்க' என்றாள் அவள், அவர் பின்புறமாக கட்டியதில் அவர் உடம்பு முழுவதும் தன மீது சாய்ந்ததில்அவள் தன்னை மறந்த நிலையிலிருந்தாள், ஆனால் மனதில் அவருக்கு முத்தம் கொடுக்க ஆசைதான், அவருடைய வெற்று உடம்பை பார்த்ததும் அப்படியே கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று பரபரத்தது.ஆனால் ஆசையை மறைக்க வேண்டுமே, இன்னும் இரண்டு நாள் பொறுத்திருக்க வேண்டும்
'நீ முத்தம் கொடுத்தால்தான் உன்னை விடுவேன்' என்றார் அவர்
உடனே திரும்பி அவர் இரண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தாள், அவரோ கள்ளை குடித்தவர் போல் தன்னை மறந்த நிலையில் 'இப்படியே பெட்டில் உட்ட்காரலாம் அனு' என்றார், அவளும் தன்னை மறந்தாள், இருவரும் நகர முட்படுகையில், ‘ராதா’ என்று அம்மா கூப்பிடும் குரலில் இருவரும், தங்கள் நிலை உணர்ந்தனர்,
‘கொஞ்சம் வெளியே வந்து என்னுடன் உட்காருங்கள்' என்று அவரிடம் சொன்னாள், நீ போ நான் வருகிறேன்' என்றார், அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது, தன் நிலைக்கு வர.
சிறிது நேரத்தில் ஹாலுக்கு வந்தார், ராதா அவரிடம் 'அப்பா, அம்மாவிற்கு துணிகள் காண்பிக்கலாமா?' என்றாள்
அவர் ராதாவை ஒரு முறை முறைத்துவிட்டு 'என்னை எதுக்கு கேக்கணும், இதெல்லாம் என்னைக் கேட்கக் கூடாது' என்றார் சுந்தரம்
எல்லாவற்றையும் பிரித்துக் காட்டும்போது அவர் உள்ளே சென்று அவளுக்கு ஒரு நகை பாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார்
'என்ன இது?' என்று கேட்டாள் ராதா
‘இது உன் நகை, இதில் நல்லதாக பார்த்து உனக்கு போட்டுக் கொள், சிலது ஏதானுலும் பரவாயில்லை, உன் தங்கைகளுக்குக் கொடு, அம்மாவிற்கும் கொடு,’ என்றார் மெதுவாக யாருக்கும் கேட்காத குரலில்
அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள் 'ம்ம், திற, ' என்றார்
அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே நகைப் பெட்டியை திறந்தாள்.
நகைப் பெட்டியை திறந்தவுடன் அவளுக்கு எல்லா நகையும் நினைவில் வந்தது, சுந்தரம் தன்னை முதல் முறை பெண் பார்க்க வந்த போது தனக்குக் கொடுத்த வைர நகை அவரே தன் கழுத்தில் போட்டு விட்டது அதை எடுத்து அவரிடம் காண்பித்தாள், கண்ணிலிருந்து நீர்த் துளி, அவருக்கும் நீர் துளி. அதை தனியே எடுத்து வைத்தாள், தங்கைகள் அவர்களையே பார்ப்பது அவளுக்குத் தெரியவில்லை,
ரஞ்சனா மெதுவாக ரம்யாவிடம் ' சந்தேகமே இல்லை, கன்போர்மாக பெரிசு, அக்காவுக்கு நூல் விடுது' என்றாள்
'அக்கா மட்டும் என்னவாம் அங்கே பாரு, எப்படி லவ்ஸ், கண்ணுல'
ரெண்டு பேரும் பாக்காத மாதிரி பார்த்துக்கொண்டிருந்தர்கள்,’ இதில் எது முஹுர்தப் புடவை?' என்று அம்மா சாந்தி கேட்டார்
ரஞ்சனா 'என்னம்மா இதுக் கூடவா தெரியலை, இவ்வளவு அழகா, எல்லாத்தையும் விட சிறப்பா இருக்கே தெரியலையா?'
‘அதில்லைடி , உங்களுக்கு வாங்கியிருக்கும் புடவைகளும் நன்னாயிருக்கு’ என்றாள் சாந்தி
‘எங்களால் தான் வாங்க முடியாது ஆனால் அவர் எவ்வளவு பார்த்து பார்த்து வாங்கியிருக்கிறார் ஒவ்வொருவருக்கும் பார்த்தாயா?’
‘சரி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, எடுத்து வையுங்கள்’. என்று சொல்லி பெண்களை அவர்களுக்கு கொடுத்த ரூமுக்கு போகச் சொல்லிவிட்டு, ராதாவிடம் ‘நாங்க எங்க ரூமுக்கு போறோம், எனக்குத் தெரியும் நீ அவருடன் பேசி விட்டு தூங்கப் போவாய் என்று ஆனால் ரொம்ப நேரம் ஆக்காதே' என்று சொல்லி விட்டுப் போனாள்.
ராதா சிரித்துக் கொண்டே சுந்தரத்திடம் போனாள் ' அவளை கட்டி அனைத்து அவளைத் தன ரூமுக்கு அழைத்த்துச் சென்றார். அங்கு அவர்கள் வரப்போகும் கல்யாணத்தைப் பற்றியும், அவர்களின் மகன் ஆனந்தனப் பற்றியும் பேசிக் கொண்டிரூந்தார்கள்.
‘என்னங்க, ஆனந்தன் வருவானா? நம் கல்யாணத்திற்கு’என்று கேட்டாள்.
தொடரும்
{kunena_discuss:1005}