விஷயம் அறிந்ததும்…..“என்ன சார் இப்டி சொல்றீங்க……சட்டுனு ஒரு பொண்ணப் பார்த்து மேரேஜ் ஆகிட்டுன்னு சொல்லிட்டு இருக்கீங்க…..? அப்டி ஆகி இருந்த முதல்ல யாராவது அடுத்து அதே ஆஃபீஸுக்கு வந்து நிப்பாங்களா சார்….?” என ப்ரச்சனையை யாரிடம் பேச வேண்டுமோ அவரிடமாக திருப்பினான் சிற்பி.….
“ஒழுங்கா தேடிப் பாருங்க சார்…..” இவளை இதற்குள் சற்று அரவணைப்பாய் பற்றியிருந்த ராகாவும் சொல்ல…..
என்ன நினைத்தாரோ அந்த ஆஃபீஸர்…..”வாங்க” என உள்ளே அழைத்துப்போனவர்……தன் டேபிளில் இருந்த கம்யூட்டரின் கீ போர்டில் அதையும் இதையுமாய் தட்ட….
அந்த ஃபார்ம் ஸ்க்ரீனில் தெரிகிறது…..
அதில் இவள் புகைப்படமும்…… அந்த அவனின் புகைப் படமும்…… அவன் தான் காலையில் கனவில் பார்த்தாளே அந்த விவன்
இந்திய சட்டப்படி அந்த விவன் ஜெரோம் இவளது கணவன் என்றது அங்கிருந்த அனைத்து ஆதாரங்களும்…..
தலையை சுற்றுவது போல் இருக்கிறது ப்ரியாவிற்கு… என்ன செய்துவிட்டான் இவன்?????
அடித்து ஏறும் அத்தனை படபடப்பில் அதோடு கூடிய அடி முடியற்ற அத்தனை கோபத்தில் … ஏனோ மயங்கிச் சரிந்தாள் இவள்…..
Friends….இது முதல் எப்பி அதனால என் வழக்கப்படி குட்டி எப்பி…..அடுத்து வர்றதெல்லாம் பெரிய எப்பியா குடுக்கிறேன்….இன்னொரு விஷயம்……வரலாற்று தமிழ் எனக்கு புதிது…. அது எப்படி இருக்குது……எப்படி இருந்தா நல்லா இருக்கும் என்பது போன்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…..கூடவே இன்னொரு விண்ணப்பம்…..நான் கடந்த சில மாதமாக கமெண்ட்ஸுக்கு ஒழுங்கான நேரத்தில் ரிப்ளை செய்யலை……ஆனால் இந்த கதையில் அப்படி நேரிடாது……அதனால் இதுவரை கமெண்ட் செய்தவர்களும் செய்யாதவர்களும் உங்களுடைய வ்யூஸை பகிர்ந்து கொள்ளுங்கள்….. அது கதையை அனவருக்கும் ப்ரியமான கோணத்தில் கொண்டு செல்ல எனக்கு பேருதவியாக அமையும்…..கூடவே பெரிய மொடிவேஷன் அது…. நன்றி
{kunena_discuss:1063}