(Reading time: 35 - 69 minutes)

"ர்போர்ட்ல நடந்ததெல்லாம் உண்மையா தேவா..?? என்று இவள் மெதுவாக பேச்சை ஆரம்பித்த போது... இவள் கையில் அவன் நறுக்கென்று கிள்ளினான்...

திடிரென்று அவன் செய்த காரியத்தில் அவன் முகத்தை இவள் பார்த்த போது... "என்ன சங்கு... பிருத்வி, யுக்தா சேர்ந்தது கனவுன்னு நினைச்சிட்டியா..?? எல்லாம் நிஜம் தான்..." என்று அவன் சொன்ன போது... இவள் எதை கேட்டால், அவன் எதை சொல்கிறான் என்ற கடுப்பில் அவன் கையில் அவனுக்கு வலிக்கும்படி இவள் கிள்ளினாள்...

இவள் கிள்ளியதால் வலித்ததில் அவனோ காரை ஓரமாக நிறுத்தினான்...

"ஏண்டீ என்னை கிள்ளின...?"

"என்னது டீ யா..??"

"ஆமாம் டீ தான்...  இனி அப்படி தான் கூப்பிடுவேன்..."

"அதை தான் நானும் கேக்கறேன்... இந்த டீ போட்டு கூப்பிட்றது... பிருத்வி ஏர்போர்ட்ல சொன்னது... இதெல்லாம் என்ன..??"

"ஏண்டீ தலையை சுத்தி மூக்கை தொட்ற... நீயும் என்னை காதலிக்கிறியா தேவான்னு நேராவே கேளேன்.."

"சரி எப்ப இருந்து என் மேல காதல்..."

"யுக்தா, தாத்தா பாட்டி வீட்ல இருந்தப்போ நீ என்னை காதலிக்கிறேன்னு சொன்னா.. அப்புறம் தான் உன்னை நான் கவனிச்சேன்... நீ என் மேல வச்சிருக்க காதலை புரிஞ்சிக்கிட்டேன்.."

"உடனே இந்த பொண்ணு நம்மள இப்படி காதலிச்சிருக்கே... அது தெரியாம இருந்திருக்கோமேன்னு... ஒரு இரக்கத்துல என்னை நீயும் காதலிச்சியா தேவா..??"

"இரக்கத்துல யாராவது லவ் பண்ணுவாங்களா..?? பக்கத்துல இப்படி ஒரு மாமா பொண்ணை வச்சிக்கிட்டு வரப் போற மனைவி எப்படி இருப்பான்னு கற்பனையில இருக்கியேடா... இவ தாண்டா உன்னோட பொண்டாட்டின்னு மணி அடிச்சுது... அப்பவே எனக்கும் லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு..."

"ஆனா தேவா.. அத்தை இதுக்கு ஒத்..." என்று சொல்லிக் கொண்டிருந்த போதே வாயை பொத்தினான்...

"ஹேய் இன்னும் நாம ஒருத்தருக்கொருத்தர் காதலையே சொல்லிக்கல... அதுக்குள்ள நெகட்டிவ்வா ஏதாவது பேசி வைக்காத.."

இவள் வாயை பொத்திய அவன் கையை எடுத்தவள்...

"அதை தான் நானும் சொல்றேன்... இன்னும் நாம காதலையே சொல்லல... அதுக்குள்ள இப்படி வாயை பொத்தறது... கிள்ளறது... இது மாதிரி டச் பண்றதெல்லாம் வேண்டாம்..."

"ஏண்டீ நான் உன்னை தொட்டதே இல்லையா..?? இதெல்லாம் டச் பண்றதா..?? அப்போ நீ என்னை கிள்ளினது... கிள்ளினதை கூட விடு... அன்னைக்கு என்னோட தோளில் சாஞ்சுக்கிட்டு... நம்ம சம்யூவுக்கு மட்டும் ஏன் தேவா இப்படி நடக்குதுன்னு பேசினியே அதெல்லாம் என்ன..??"

"அது... அது.."

"என்ன அது.. அது.. ஏண்டீ மனசுல இருப்பதை மறைக்க நினைக்கற... உன்னோட காதலை சொல்ல ஏன் தயக்கம் காட்ற... நம்ம யுக்தாவை பார்த்தீயா..?? பிருத்வி அந்த சப்னாவை லவ் பண்றது தெரிஞ்சும் அவ காதலை பிருத்விக்கிட்ட அவ சொன்னதால தான் எல்லாம் மாறுச்சு... அவப்பாட்டுக்கு பிருத்விக்கிட்ட தன்னோட காதலை சொல்லாமலேயே நியூயார்க் போயிருந்தா... தன்னோட மனசுல இருப்பது பிருத்விக்கு தெரியாமலேயே போயிருக்கும்.. ரெண்டுப்பேரும் ஏதோ ஒரு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருப்பாங்க... அதனால மனசுல இருப்பதை மறைச்சு வைக்க நினைக்காத..."

"....."

"என்னோட அம்மா ஒன்னும் சீரியல்ல வர வில்லியெல்லாம் இல்ல... என்னோட நன்மைக்காக எல்லாம் செய்வாங்க... இப்பவே எனக்கு, தாத்தாக்கு, பாட்டிக்குன்னு 3 பேருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு... அப்பாக்கும், தர்ஷினிக்கும் இது தெரிஞ்சா அவங்களும் எனக்கு சப்போர்ட்டா பேசுவாங்க... எங்க 5 பேரையும் மீறி அம்மா என்ன செஞ்சுடப் போறாங்க... அதனால நீ பயப்பட வேண்டாம்..." என்றவன் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன பெடடியை எடுத்தான்.. அதை திறந்து அதிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்...

"இந்த மோதிரத்தை போட்டு என்னோட காதலை சொல்லனும்னு இதை எப்பவோ வாங்கி வச்சேன்... சரி நம்ம யுக்தா பிரச்சனை முடியட்டுமேன்னு வெயிட் பண்ணேன்... அதுக்குள்ள பிருத்வி உளரிட்டான்.... இனி எதுக்கு வெயிட் பண்ணனும் இப்பவே என்னோட காதலை சொல்றேன்..." என்று அவள் இடதுக் கையை எடுத்து மோதிர விரலை பார்த்த போது அதில் ஏற்கனவே SS எழுத்தோடு ஒரு மோதிரம் இருந்தது...

"என்ன இது யுக்தா ஞாபகமா இந்த மோதிரத்தை போட்ருக்கியா..  இப்போ இதைக் கழட்டி அந்த கை விரலில் போடு... இந்த விரலில் இருந்து தான் நரம்பு இதயத்துக்கு போகுதாம்... அதனால இதுல தான் நான் மோதிரம் போடனும்... உங்க அக்கா, தங்கை பாசம் தான் உடம்பு பூரா கலந்திருக்கே... அப்புறம் என்ன..??"

"ஏன் தேவா இப்படி சொல்ற... எங்க அக்கா, தங்கை பாசம் உடம்புல கலந்திருக்குன்னா... நீ என் மூச்சுல கலந்திருக்க..."

"அப்பா... இப்பயாவது மனசை விட்டு வெளிய சொன்னியே... கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு... இருந்தாலும் நான் சொல்ற காதல் உன் இதயத்தை போய் சேரட்டும்..." என்றவன்... அவள் மோதிரத்தை எடுத்து வேறு விரலில் போட்டதும்... இவன் வாங்கிய மோதிரத்தைப் போட்டான்...

"ஐ லவ் யூ சங்கவி..."

"ஐ லவ் யூ டூ தேவா..."

"இந்த மோதிரம் என்னோட லவ்வை ப்ரபொஸ் பண்ணதுக்காக மட்டுமில்ல... நம்ம கல்யாணத்துக்கான அச்சாரமும் கூட... சீக்கிரமா அம்மாக்கிட்ட பேசி நம்ம கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கப் போறேன்..."

"தேவா... அத்தை நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும்... சம்யூ மேல இருக்க கோபம் அவங்களுக்கு போகுமா..?? அவங்க சம்யூவை ஏதாவது சொன்னாங்கன்னா என்னால தாங்கிக்க முடியாது.."

"நான் தான் அப்பவே சொன்னேனே சங்கு... எனக்கு கல்யாணம் நடந்தா யுக்தா மேல இருக்க கோபம் அவங்களுக்கு போய்டும்... இருந்தாலும் நானும் யுக்தாக்காக அம்மாக்கிட்ட பேசறேன்..."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு தேவா.. இன்னைக்கு இப்படி ஒரு சந்தோஷமான நாளாம் அமையும்னு நான் எதிர்பார்க்கல... ஒருபக்கம் சம்யூ, பிருத்வி சேர்ந்தது... ஒருபக்கம் நீ என்னை காதலிக்கிறது... இன்னைக்கு சம்யூவ விட நான் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...

நம்ம கல்யாணம் நடக்கப் போறதுக்கு அச்சாராமா இந்த மோதிரம் போட்ருக்க... ஆனா எனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா... நானும் ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சிருப்பேன்..."

"அதனால என்ன சங்கு... ஆனா நீ நினைச்சா ஒரு கிஃப்ட் கொடுக்கலாம்... ஆனா நீ கொடுக்க மாட்டியே..."

"என்ன தேவா என்ன கிஃப்ட் அது... என்கிட்ட இருக்குன்னா சொல்லு... நான் கொடுக்கிறேன்..."

"இல்லை.. நீ கொடுக்க மாட்டா... உன்கிட்ட கேக்கறது வேஸ்ட்..."

"அப்படியெல்லாம் இல்லை தேவா... நீ என்னன்னு சொல்லு... நான் தர்றேன்..."

"ஹுஹும்... அதான் சொல்றேன் இல்ல நீ தரமாட்டேன்னு... சரி நீ கண்ணை மூடு... அதை நானே எடுத்துக்கிறேன்..."

"சரி... ஆனா அது என்ன கிஃப்ட்..?? நான் வச்சுருந்தா எனக்கு தெரியாதா..?? என்னோட பேக்ல பணம், சில கார்ட், சீப்பு, ஃபேஸ் வாஷ் அதெல்லாம் தான் இருக்கும்... வேற ஒன்னும் இல்ல தேவா.."

"நீ கண்ணை முதலில் மூடு..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.