(Reading time: 10 - 20 minutes)

ன்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள்.

‘நமக்கு இன்னிக்குத்தான் கல்யாணமாகி இருக்கிறது, நீ என்னை விட்டு எங்கே போனாய்?’ என்று கேட்டார்.

‘நான் எங்கே போனேன், அம்மாவோடு கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தேன்,’அவர் காதில், ‘நான் இரவு பூரா உங்களோடுத்தான் இருக்கப் போகிறேன் கொஞ்சம் எனக்கு சில கடமை இருக்கிறது, அதை முடித்து விட்டு வருகிறேன். ஆமாம் ஆனந்தன் எங்கே? என்று கேட்டாள் ? 'அவன் தூங்கப் போய்விட்டான்,'

 'சரி அவனையும் பார்க்கப் போறேன் நீங்களும் வரீங்களா அவன் ரூமுக்கு?'

' நான் எப்பவும் அவன் ரூமுக்கு போக மாட்டேன், இன்றுதான் காலைல பார்க்கப் போனேன்,' என்றார்

‘சரி இன்னிக்கு அவன் முகம் சரியில்லை என்ன விஷயம்னு தெரியனும் வாங்களேன் கேக்கலாம்?’ என்றாள் அவள்

‘எனக்குத் தெரியும், 'என்றார்,

‘உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தும் ஏன்? கேக்கவில்லை அவனை?’என்றாள் அவள்

‘நான் அவன் அப்பா அவனை வளர்த்தவன், அவனுக்கு என்ன வேண்டுமென்று எனக்கு தெரியும்’ என்றார் .

'ஓ, அப்படியா, அவனுக்கு என்ன தேவை’ என்று கேட்டாள்?

‘அவனுக்கு ....ரம்யா மேல் ஆசை, அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாள்,அதான்' என்றார்,

‘ரம்யா சந்தோஷமாக இருக்கிறாளா?’ என்று கேட்டாள் அவள் சுந்தரத்திடம்

'அது, எனக்கு எப்படித் தெரியும் அவளை மதியம் நாம் வந்ததிலிருந்து காணோம்' என்றார்

‘அதான், நான் போய் இந்த இருவருக்கும் என்ன ப்ராப்ளேம்ன்னு பார்க்கப் போகிறேன், நீங்களும் வந்தால், இந்த இருவர் ப்ராப்ளேத்தை சரி செய்யலாம்?’ என்ன சொல்கிறீர்கள்.

‘அதை நாம் நாளை விசாரிக்கலாமே, ஆனந்தனுக்கும் டைம் மாறியிருக்கிறதாலே தூங்கப் போய்விட்டான்,’ என்றார்

‘இதப் பாருங்க நம்ம பசங்க, அங்க சோகத்துல வாடியிருக்காங்க, எப்படிங்க தூக்கம் வரும், நான் வாடியிருக்கேன் எனக்குத் தெரியும், நீங்கள் ? எனக்குத் தெரியாது? என் குழந்தை கஷ்டப் படறதை என்னால் பார்க்கமுடியாது, என் தங்கையும் என் குழந்தை தான், அதுமட்டுமில்லை என் குழந்தையை நினைத்து வேதனைப் படும் குழந்தை, ‘என்று கூறினாள்

‘நீ, என்ன பண்ணப் போறே?’

‘நான் போய் ரெண்டு பேரையும் முதலில் பார்த்து விட்டு வருகிறேன்,’ என்று கூறினாள்

‘சரி ஒரு நிமிஷம் உள்ளே வந்துவிட்டுப் போ,’ என்றார்

‘ரஞ்சனா எங்கே? ‘என்றாள்

‘அதுக்குள்ளே, உள்ளே வான்னு சொல்றேன் இல்ல,’ என்று மதியம் போல் ஒரு குரல்

உடனே அவர் பின்னாலே சென்றாள்

‘உள்ளே போனவுடன் கதவை மூடி அவளை அனைத்து அவளை அழுத்தி முத்தம் கொடுத்தார், கல்யாணம் ஆன கையோடு உன்னை இப்படி அனைத்து முத்தம் கொடுக்க நினைச்சேன் நீ போய் உன் அம்மா மடியில் படுத்துண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறாய்,’

‘நான் உனக்காக எவ்வளவு நேரம் இங்கு காத்துக் கொண்டிருக்கேன், ‘என்றார் உல்லாசமாக சிரித்தபடி

‘அவள் அவரை இழுத்து அவர் வாயில் முத்தம், அவரை மாதிரியே அழுத்தமாக கொடுத்தாள்’

கொஞ்ச நேரம் இருவரும் முத்தத்தில் அழுந்தினார்கள், தெளிவு அடைந்தவுடன், அவள் சொன்னாள்

‘இப்போ சந்தோஷமா இப்போ நான் போலாமா?’ என்று கேட்டாள்

‘என் அனுக்கு இப்படி கோபம் வராதே, இது எப்படி?’என்று கேட்டார்

‘அனுவுக்கு கோபம் வராது, ஆனால் அனுராதாவுக்கு வருத்தம் இருக்கும், அதனால் யு ப்ளீஸ் எக்ஸ்கியுஸ் மீ,’ என்று அங்கிருந்து வெளியே போனாள்,

அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்திற்கு சிரிப்பு வந்தது

அவள் தன்னை இழுத்து முத்தம் கொடுத்த விதம், அவருக்கு ரொம்ப பிடித்தது, அவள் தன்னிடம் அந்த உரிமை எடுத்துகொண்டது,

அவரும் அவள் பின்னாலேயே போனார், அவள் கூப்பிட்டு தான் போகவில்லை என்றால் எப்படி?

மாடி ஏறி போனார் அங்கே குரல் கேட்டது, 'ஏண்டி என்னை கூப்பிடலை? என்ன ஆச்சு? ரம்யா ஏன் இப்படி அழறே, போ முதல்லே மூஞ்சி அலம்பிண்டு வா, நாம பேசலாம், போ என்று கூறி

அவள் பாத்ரூம் போனவுடன், ‘ரஞ்சி என்ன ஆச்சு ஏன் இவ அழறா?’ என்று கேட்டாள் ராதா

'எனக்குத் தெரியாதக்கா, நீ அவளிடம் கேள்?' என்றாள் ரஞ்சி

'உனக்குத் தெரியாமல் இருக்காது? உங்கள் ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஒற்றுமை என்று எனக்குத் தெரியும்,'என்றாள்

தொடரும் 

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.