(Reading time: 12 - 23 minutes)

திடீரென அந்த மனிதன் ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு பெண்ணின்  கையில் இருந்த தூக்கினை பிடுங்கி திறந்து பார்க்க அது காலியாக இருக்கவே சோகமானதை கண்ட சமீர்

"நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் மா. சாப்பாடு குடுக்கலாம்" சிறுவன் தன் தாயின் கரம் பிடித்து அண்ணார்ந்து பார்த்து கெஞ்சவே தாய்க்கும் தன் மகனை காப்பாற்றிவருக்கு ஒரு வேளை உணவளிப்பதே தர்மம் என்று படவே சரி என தலை ஆட்டினாள்.

அதே நேரம் வானத்தில் இடி ஓசையும் மின்னலும் ஒளிர விரைவில் வீடு திரும்ப பணித்த அன்னையை தொடர்ந்து சமீர் அந்த மனிதன் கரம் பற்றி " மாமா " என்றழைத்தான்.

கரத்தின் ஸ்பரிசத்தில் திரும்பி அச்சிறுவனை பார்த்த அவர் அவனது உதடுகளின் அசைவில் மாமா என்று அவன் அழைத்ததை பார்த்துக் கொண்டே திக் பிரமை பிடித்ததை போல நின்று கொண்டிருந்தார்.

அதே நேரம் மின்னல் வெட்டுடன் இன்னொரு இடி சத்தம் முழங்க,அந்த ஒளியிலும் அதிர்விலும்   சமீரின் முகம் வேறு ஒரு சிறுவனின் முகமாய் அந்த மனிதருக்குத் தோன்ற அவர்  தலைக்குள் ஆயிரம் இடி ஓசை ஒலிப்பது போல இருக்கவே  தலையைப் பிடித்துக் கொண்டார். தூறல் பெருமழையாய் உருவெடுக்க சமீர் அவரை பிடித்து இழுத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினான். அந்த மனிதரும் அச்சிறுவனை தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.