(Reading time: 11 - 22 minutes)

ஞ்சனா சீனுவிடம் திரும்பி, ‘யூத்ஸ்,’ என்று அவரை கண் காட்டி, ‘நீயும் இருக்கியே’ என்றாள்,

‘ஹே, பொண்ணு, என்ன சொல்றே நீ, இங்கே என்னை திரும்பிப் பார்த்து சொல்லு’ என்று அவளை வம்பிக்கிழ்த்தார், திடீரென்று’ பட்’ என்று ஒரு சத்தம் வந்தது, எல்லோரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தார்கள் , சாந்திதான், ரஞ்சனாவை கன்னத்தில் அடி கொடுத்திருக்கிறாள், என்ன நினைத்தே பெரிய மனிதர் அவரிடம் இப்படி பேசுகிறாய் மரியாதை கொடுக்கத் தெரியாது, எங்கிருந்து கற்றுக் கொண்டாய் இதெல்லாம், என்று பல்லைக் கடித்துக் கொண்டு, அவளை திட்டியதை பார்த்து உடனே பாய்ந்து, ரஞ்சனாவை இழுத்து தன்னுடன் அனைத்துக் கொண்டார், அவளின் தலை உச்சியில் முத்தம் கொடுத்து,’ என்னம்மா இது, நான் தான் அவளை வம்பிழுத்தேன், எல்லோர் மனமும் கனமாக இருக்கிறது, இந்த மாதிரி அவள் பேசினால் எல்லோரும் கொஞ்சம் சிரிப்போம் மனது லேசாகிவிடும் என்றுதான்.....

வா என் கண்மணி ,’என்று அங்கிருந்த சோபாவில் தன்னுடன் அனைத்து கொண்டார்.

‘நல்ல ஆளு போட்டுகொடுத்துட்டே? என்ன கொஞ்சற இப்போ, ‘என்று அவள் சொன்னவுடன் சத்தம் போட்டு சிரித்தார் அவர் சிரித்ததைப் பார்த்தனர், காண்பித்துக் கொடுக்காதே, ‘யு ட்ரய்டர்,’ என்றாள், அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை, ‘என்னை விடு உன் பொண்டாட்டிய கொஞ்சு,’ என்றாள்’ நீ என் பெண், உன்னையும் கொஞ்சுவேன், என் பொண்டாட்டியையும் கொஞ்சுவேன்,’ என்று’ ஐ ஆம் சாரி மா கண்மணி, நான் இதை எதிபார்க்கல,சாரி என்று அவள் அழுது முடித்ததும் போ உன் ஆளு வேலையை விட்டு உனக்காக வந்திருக்கான் போ, இன்னிக்கு முழுக்க உன்னோடுதான் இருப்பான் அழாம ஹாப்பி யா இரு என்றார்,’ கண்ணைத் துடைத்து கொண்டு சீனுவிடம் போய் அவன் தோளில் சாய்ந்தாள், அவன் அவளை தட்டிக் கொடுத்தான், அவள் கண்ணிலிருந்து ஈரம், அவன் அவளைக் கட்டிக் கொண்டு ‘பரவாயில்லை அம்மாவுக்கு, அப்பா ஆபேரஷன் எப்படி ஆச்சோ என்ற வருத்தத்தில் செய்து விட்டார் கவலைப் படாதே’ என்றான்

சுந்தரம் நகர்ந்து ராதாவைக் கட்டிக் கொண்டார், அப்போது நர்ஸ் வந்தாள், ‘சார் டாக்டர் உங்களைப் பார்க்க இங்கே வந்து கொண்டிருக்கிறார்,’ இது MD ரூம், அவருக்கு ஒரு சேர் கொடுத்து எல்லோரும் சோபாவில் உட்கார்ந்தார்கள், இரண்டு பேர் உட்காரும் சோபாவில் சுந்தரமும் ராதாவும் உட்கார்ந்தார்கள், டாக்டர் உள்ளே வந்தார்,

‘ஹலோ டாக்டர், எழுந்து கை கொடுத்து ப்ளீஸ் சிட்,’ என்று சேரை காண்பித்தார், அவர் உட்கார்ந்துக் கொண்டு சர்ஜெரி நல்லபடியாக முடிந்தது,இன்னும் கொஞ்ச நேரத்தில் ICU வில் மாற்றி விடுவார்கள், உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை, ஒரு முறை எல்லோரும் ஒவ்வொருவராக போய் பாருங்கள் பிறகு அந்த அம்மா மட்டும் இருந்தால் போதும், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் உங்களுக்கு இங்கே அபர்ட்மெண்ட் இருக்கு இந்த ரூம் இருக்கு.’

‘என்னோட அஸிஸ்டன்ட் இங்கே ரெண்டு நாள் இருக்க சொல்லியிருக்கேன், எதுவாக இருந்தாலும் அவன் பார்த்துப்பான் என்றார் டாக்டர்,’

‘தேங்க்ஸ் டாக்டர், ஐ ரியலி மீன் இட்,’ என்றார் சுந்தரம்

‘யு ஆர் வெல்கம்’, என்றார் டாக்டர், ‘ஓகே சார் ஐ வில் டேக் லீவ் ஆப் யு ‘என்று சொல்லி கிளம்பினார்

‘ஓகே, எல்லோரும் ஓகே தானே’ என்று எழுந்து சாந்தியிடம் போனார் என்னம்மா இப்போ டாக்டர் சொன்னது எல்லாம் கேட்டீங்க தானே என்றார்

‘எந்த கவலையும் படாதீங்க, நமக்கு இங்கு ஒரு வீடு இருக்கு அவர் நல்லா ஆகிற வரை இங்கேயே இருந்து நல்லா பார்த்துகிட்டு வீட்டுக்கு போகலாம் சரியா,’ என்றார்

சாந்தி தன் இரு கைகளையும் அவருக்கு கூப்பினார்,’ கடவுள் போல வந்து எங்க குடும்பத்துக்கு விள்ளகேத்தி வைத்திருக்கீங்க’ என்றாள்,

‘என்ன பாட்டி இது’ என்றான் ஆனந்தன்

‘ஆமாம்மா, இதிலிருந்து இன்னும் நீங்க உங்களில் ஒருத்தனா என்னை ஏத்துக்கலை என்று தெரியறது, ரொம்ப வருத்தமா இருக்கும்மா’ என்றார் சுந்தரம், ‘எவ்வளவு இறுமாப்பா இருந்தேன் இவ்வளவு உறவு, இவ்வளவு மனிதர்கள் எனக்காகன்னு நினைச்சேனே, அதில்லைடா நீ வேற நாங்க வேறன்னு சொல்லாம சொல்லிட்டீங்க’ என்றார்

‘ஐயோ, அப்படியெல்லாம் இல்லை, இனிமே இப்படி எல்லாம் பேசமாட்டேன் என்னை தப்பா நினைச்சுக்காதீங்க’ என்றார் சாந்தி

‘சரிம்மா இனிமே என்னை வேறாளா நினைக்காதீங்க அவ்வளவு தான் என்று கூறி, ராதாவிடம் வந்தார் ‘நானும் நீயும் ஒண்ணா போய் பார்க்கலாம், ‘என்றார்

‘டாடி, நானும் ரம்யாவும் நைட் இங்கே பாட்டியோடு இருக்கோம்’ என்றான் ஆனந்தன்

‘சரி இருங்க அவருக்கு துணை வேண்டும்,’ என்றார் அவர்

‘நான் வேண்ணா நாளைக்கு இங்கே இருக்கேன்’ என்றாள் ரஞ்சி

‘இல்லை ராஞ் நாங்களே இருக்கோம், மார்னிங் நானே அவளை காலேஜில் டிராப் பண்ணிடறேன், பாட்டி உங்களுக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்லையே’ என்றான் ஆனந்தன் ,

‘இல்லைப்பா கண்ணா,’ என்றார் சாந்தி

‘சரிப்பா நீங்களெல்லாம் தாத்தாவைப் பார்த்துவிட்டு கிளம்புங்கள்’ என்றான்

‘எனக்கு வீடு பார்க்க போகணும், ராதா, ரஞ்சியை கூட்டிட்டு போகட்டா என்ன ஆண்டி, ‘என்று கேட்டான்

‘கூட்டிட்டு போ’ என்றார்கள் இருவரும்

‘என்னப்பா வீடு’ என்று கேட்டார் சுந்தரம்

‘இல்ல சார் அக்காக்கு கல்யாணம் ஆகப் போறது அதனால் வேறு வீடு பார்க்கலாமென்று ‘என்றான் சீனு

‘எனக்கு சிடியில் மூனு பிளாட் இருக்கு நீ வேண்ணா பாரேன் சும்மாதான் பூட்டிக் கிடக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக்கோ, இரு,’ சிவாவுக்கு கால் செய்தார்

‘சார்’ என்றான் சிவா

‘நம்ம பிளாட்ஸ் இருக்கில்ல’ ஆமாம் என்றான்,’ அதை நம்ம சுமதி வீட்டுக்காக சீனுவை கூட்டிட்டுப் போய் காட்டு ‘என்றார் நமுட்டு சிரிப்புடன்

அடுத்த அத்தியாயத்துடன் முற்றும்!

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.