அசுர மனம் கொண்ட காலம்,இறைவனுக்கே அப்பிராப்தியை நல்காத போது,மனிதனுக்கா தரப்போகிறது!!
"நீங்க பூஜையை முடித்துவிட்டு வாங்கப்பா!"
"சரி கண்ணா!"-அவர் மீண்டும் புரோகிதர் இருந்த ஸ்தலத்திற்கு சென்றார்.
ராகுல் தனது இரு விழிகளைத் துடைத்துக் கொண்டான்.
என்றோ ஒருநாள் தனது கடந்தக்கால நினைவு அவன் நினைவில் எட்டியது.
அவனுக்கு அப்போது 11 வயதிருக்கும்!!ரகுவிடம் இருந்து பிரிந்து வந்தப்பின் நிகழ்ந்த சம்பவம்!!
ஒருநாள்...
"எல்லாத்திலும் நல்ல கிரேடு!ஏன்டா மேக்ஸ்ல மட்டும் மார்க் மோசமா இருக்கு?"-அமர வைத்து கேட்டாள் மது.
"............"-ஏதும் பதில் கூறாமல் விழித்துக் கொண்டிருந்தான் இவன்.
"என்ன?அம்மாக்கும்,பையனுக்கும் என்ன சண்டை?"-என்றப்படி அவனருகே அமர்ந்தார் சரண்.
"நீங்களே பாருங்க!"-மதிப்பீட்டு சான்றிதழை காண்பித்தாள்.
"ஐயோ!சூப்பர்டா!என் செல்லமே!நல்ல மார்க் எடுத்திருக்க!"
"மேக்ஸ் மார்க்கை பாருங்க!"
"அம்மூ..நான் அதுக்கு தான் பாராட்டினேன்!"-அவளது முகம் வெளிறி போனது.
"நான் எல்லாம் மேக்ஸ்ல பாஸ் பண்றதுக்கே என்ன வேலையெல்லாம் பார்த்தேன்.உனக்கு தெரியாதா?"
"என்னங்க நீங்க?அடுத்தமுறை நல்லா எடுடான்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா..!"
"அம்மூ..என் பையன் புத்திசாலி!அவன் நல்லா வந்துடுவான்.என்னடா கண்ணா சரி தானே?"
"ம்..ஆமாம்பா!நான் அடுத்த முறை நல்லா படிக்கிறேன்மா!"
".............."
"இல்லைன்னா,அதோட நான் விளையாடவே போக மாட்டேன் பிராமிஸ்!"-அவள் சிரித்துவிட்டாள்.
"சரி போ!போய் ஹோம் வொர்க் எடுத்துட்டு வா!"-அவன் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான்.
"ஏன் அம்மூ?ராகுல்..உண்மையிலே நம்ம பையனா இருந்தா நல்லா இருக்கும் தானே!"
"இப்போ மட்டும் என்னவாம்?அவன் நம்ம பையன் தான்!"
"நான் நீ கொஞ்ச நாளில் மனசு மாறிடுவியோன்னு நினைத்தேன்!ஆனா..."
"இதோப் பாருங்க..எனக்கு அவன் தான் முதன்முதலா தாய் ஸ்தானத்தை தந்தான்.என் கர்ப்பத்துல சுமந்தா தான் என் மகனா?எனக்கு அவன் தான் முதல் வாரிசு!நாளைக்கு எனக்கு ஏதாவது ஆனா,அவன் தான் எனக்கு கொள்ளி போடணும்!!இனி இதுமாதிரி பேசுனீங்க,அப்பறம்..."
"என்ன பண்ணுவ?"
"வெளியே தள்ளி கதவை லாக் பண்ணிடுவேன்."
"அடிப்பாவி...!ஓ காட்!எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேனே!"-மனம் துடித்துப் போனது அவனுக்கு!!
கரம் கூப்பி வணங்கி நின்றான்!!
அதுவரையில் தாயாய் அவன் மனதினை வியாபித்திருந்தவள்,அந்நிமிடம் முதல் தெய்வமாகி வணங்கும் பேறு பெற்றாள்.
தொடரும்
{kunena_discuss:1070}