அவள் புரிந்தது போல் நின்றிருந்தாள்.
அவள் யோசிக்கட்டும் என்று ஒதுங்கி சென்றார்.
திருமண விசயமாக அவளை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம். என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டார்.
காவ்யாவும் அவள் மனதை மாற்றுவதற்காக தனது தோழிகளை அழைத்துக்கொண்டு வந்து அவளிடம் ஏதாவது பின்னல் வேலை பற்றி தெரிந்துகொள்வாள்.
வேலையில் ஒன்றிப்போகும்போது சிந்தனாவும் எதையும் நினைப்பதில்லை.
சிற்பியை பொறுத்த வரைக்கும் அவனுக்கு எதுவுமே தெரியாததால் புதிதாக அறிமுகமான சொந்தங்கள் அவனை ஈர்த்து மகிழவே செய்தன. கிராமத்து மனிதர்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறை பற்றியெல்லாம் ஆவலுடன் கேட்டுக்கொண்டான்.
வணங்காமுடி கூட அவனைக் கிண்டல் செய்தார்.
“என்னடா பேராண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரணையில் சிற்பி விளக்க இருவரும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வதை அனைவரும் சந்தோசமுடன் பார்த்து ரசித்தனர்.
“தாத்தா! நாம எங்கேயாவது போய் வரலாமா?”
“எங்கேப்பா?”
“அப்பாதான் போனில் சொன்னார். எவ்வளவு நாள்தான் ஒரே இடத்தில் இருப்பீங்க? பக்கத்தில் எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு சொன்னார்.”