“என் காதலை மறைச்சது தப்புதான் விழிம்மா..ஆனா அதற்கான காரணத்தை நான் சொல்லிட்டேன்ல?”
“ மண்ணாங்கட்டி காரணம்..போடா!நாம இதை டிஸ்கஸ் பண்ணியே முடிவு பண்ணியிருக்கலாம்!”
“ஹா ஹா சொல்றதை கேளுடீ..ஆனா உன் படம் இருக்குல!அதுல முதல்காட்சியின் தூயவிழி உயிரோடு இல்லைன்னு தெரிஞ்சதுமே அந்த தெய்வீகன் நான் இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!”
“ஏன் அப்படி?”
“லூசு, நீயே உயிரோட இல்லைனா நான் எப்படி டீ உயிரோட இருப்பேன்?” என்று காதலுடன் அவன் கேட்கஅவனையே முறைத்தாள் தூயவிழி..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ தெரியுது டீ ரொம்ப கலப்படமான வசனம்ன்னு.. ஆனா சத்தியமா உன்னை எப்படி சமாதானம் பண்ணுறது தெரியலம்மா.. சோ இறங்கி வந்துடு!” என்று உண்மையை சொல்லி தெய்வீகன் கெஞ்சவும்,அவன் அடர் கேசத்தை கலைத்து விட்டு சிரிப்புடன் அவன் மார்பில் புதைந்து கொண்டாள் தூயவிழி.
அவளை விடவே மாட்டேன் என்பது போல இறுகிய அணைப்பின் மூலம் இத்தனை நாளாக மறைத்து வைத்த காதலை உணர்த்தினான் தெய்வீகன். அவங்களது கொஞ்சம் தொடரட்டும். நாம டாட்டா சொல்லிக்கலாமா?
மை டியர் ப்ரண்ட்ஸ், “இது பேய் காதல்!” தொடர் இனிதாய் முடிவடைகிறது. பெரிய கருத்து ஒன்றை சொல்லனும்னு இதை ஆரம்பிக்கல. சும்மா ஜாலியா ஒரு காதலை சொல்லுவோம்னு நினைச்சேன். அதே நேரம் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கனும்னு ஆசைப்படுறேன்.
வாழ்க்கையில் எல்லாவிஷயங்களையும் ப்லான் போட்டு பண்ணிவிட முடியாது!முக்கியமா காதல்! என் வாழ்க்கை சூழல் இது சோ நான் அதற்கு ஏற்ற மாதிரி ஆளை தேடிதான் காதலிப்பேன்னுநினைக்கிறது நல்ல விஷயம்.. ஆனா இந்த காதல் ஒரு மோசமான நம்பியார்! எதிர்பாராத நேரத்துல மின்னல் வெட்ட வைக்கும்!
சில நேரம் காதல் பிரச்சனைகள் நாம நினைக்கிற அளவுக்கு பெரிய விஷயமாகவே இருக்காது! எதுவா இருந்தாலும் ஒருபக்கமாய் அந்த ப்ரச்சனையைப் பற்றி யோசிச்சு மறுகி உருகி போறதுவிட,நாம நேசிக்கிறவங்க கிட்டமனசு விட்டுபேசலாமே!
மனசு விட்டு பேசுங்க!பேய்த்தனமா காதலிங்க! என்ற சந்தோஷமான நோட்ல இந்த கதைய முடிக்கிறேன்.. பாய் பாய்.!
முற்றும் !
{kunena_discuss:1072}