“அதுதான் தெரியுமே.. உனக்கு என்ன பிரச்சினை.. “
“பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லையே..”
“ஹேய்.. பொய் சொல்லாத.. நேத்து சாயங்காலம் வரைக்கும் வீட்டுக்கு போக போறோம்னு குதிச்சவ அதுக்கு அப்புறம் ஒண்ணுமே பேச மாட்டேங்குற. நானும் சரி பாக் பண்றதுலே இருக்கன்னு நினைச்சா, இப்போவும் அந்த சந்தோஷமே காணுமே.. “ அவள் அமைதியா இருக்கவும்,
“சொல்லுடா.. என்ன பிரச்சினை உனக்கு.. ?”
அவள் சொன்ன பதிலில் கொஞ்ச நேரம் செய்வது அறியாது முழித்தாள் சுபத்ரா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
அதே நேரம் அங்கே அர்ஜுன் ராகுலிடம்,
“என்னடா.. ராகுல் நேத்திலேர்ந்து ஒரு மாதிரியா இருக்க ?”
“அது “ என்று தயங்கவும்
“சொல்லுடா மச்சான்.. “
“என்னை தப்பா நினைக்கதாடா அர்ஜுன்.. நான் நிஷா கிட்ட என்னோட ஆசைய சொல்லிட்டேன்.. “ எனவும் அர்ஜுன் அவனை செய்வது அறியாமல் பார்த்தான்.
“என்னடா.. நாம வேண்டாம்னு முடிவு செய்து இருந்தோமே.. “
“ஆமாம்.. ஆனால் என்னாலே நேத்து கட்டுபடுத்த முடியாமல் சொல்லிட்டேன்..” என்ற ராகுல் முதல் நாள் நிகழ்வுகளை கூறினான்
பார்ட்டியின் முடிவில் அர்ஜுன் , சுபத்ராவும் பேசும்போது ராகுலும் நிஷாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.
“ஹேய்.. நிஷா.. இந்த ட்ரைனிங் முடிச்சுட்டு கிளம்ப போறீங்க .. எப்படி பீல் பண்றீங்க..?”
“சந்தோஷமா இருக்கு கேப்டன்.. இனிமேல் வேலைதான்.. ஆர்மி லே வேலைன்னா ஒரு கெத்து தான் இல்லை.. “
“ஹ்ம்ம். அது உண்மைதான்.. சரி உங்க அப்பா, அம்மா தவிர உங்க மத்த relatives எல்லாம் என்ன சொல்லுவாங்க.. ?”
“கொஞ்சம் பேசுவாங்க தான்.. ஆனால் நான் அத பத்தி கவலைப்பட மாட்டேன்..”
“அப்போ உங்க அப்பா , அம்மா கவலைபடுவாங்களோ”
“இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனால் கல்யாணத்துக்கு பார்க்கும்போது என்ன பண்றதுன்னு அவங்க பீல் பண்றாங்க.. “
“ஓஹ.. அப்போ வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிசுடாங்களா?”
“அப்படி தெரியல.. ஆனால் அத யோசிக்கிற மாதிரி தெரியுது... “
“அப்போ மிலிட்டரிலே உள்ளவரையே மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான்..”
“அது கஷ்டம் கேப்டன். எங்க சொந்தத்துலே அப்படி யாரும் கிடையாது.. சொல்ல போனா நமக்கேன் வம்புன்னு போற கும்பல்தான் அதிகம்.. அதுனாலே போலீஸ் வேலை கூட ரொம்ப கிடையாது..”
“ஏன் சொந்ததில்தான் பார்க்கனுமா..? வெளியிலும் பார்க்கலாமே.. ?”
“வெளியிலே யார் சார் இருக்காங்க.. ?”
ஒரு வேகத்தில் “ஏன் நான் இல்லையா?” என்று கேட்டு விட்டு , பிறகுதான் உணர்ந்தான்.
“என்னாச்சு சார்.. ? சும்மா பேச்சுக்கு பதில் சொல்லனும்னு சொல்லிடீங்களா?” என்று கேட்க,
கொஞ்சம் யோசித்தவன், பின் வருவது வரட்டும் என்று
“இல்லை நிஷா.. இது ரொம்ப நாளா என் மனசில் உள்ள ஆசைதான்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு.. இந்த ட்ரைனிங் முடிஞ்சு சொல்ல எண்ணியிருந்தேன் ஆனால் நான் இப்போ promotion லே காஷ்மீர் போகபோறேன்.. திரும்பி வருவது பற்றிய நிச்சயம் சொல்ல முடியாது.. அதுதான் உன்கிட்ட சொல்லல.. ஒருவேளை நான் திரும்பி வரலைன்னால் உன் வாழ்க்கை முடிஞ்சிடகூடாதுன்னு யோசிச்சேன். ஆனால் இப்போ என்னை அறியாமல் நான் சொல்லிட்டேன்.. எப்படியும் இன்னும் ஒரு மூணு வருஷம் ஆகும்னு நினைக்கிறன் உன் கல்யாணம் பார்க்க.. அதுக்குள்ளே நான் திரும்பி வந்தேன்னா என்னோட விருப்பத்தை consider பண்ணு.. இல்லை என்றால் உன் வாழ்க்கைய proceed பண்ணு.. “ என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
ராகுல் சொல்லி முடிக்கவும், அர்ஜுன் அவனை முறைத்தான்.. பின் நினைவு வந்தவனாக
“ஏன்டா.. வேற எதுவும் சொல்லலையே..?” என்று வினவ,
“இல்லை அர்ஜுன்” என்றான்.
“சரி விடு நாளை பார்க்கலாம்..” என்றபடி இருவரும் படுக்க சென்றனர்.
ஹாய் friends.. போன வாரம் அப்டேட் கொடுக்க முடியாததுக்கு ரொம்ப சாரி... நம்ம chillzee சென்னை மக்கள் எல்லாம் safe ஆ இருப்பீங்கன்னு நினைக்கிறன்.. டேக் கேர்..
மழை பொழியும்
{kunena_discuss:1031}