(Reading time: 3 - 5 minutes)

கவிதாவின் தொப்பியை தந்து விடுவதாக சத்தியம் செய்தாள்.

  

கவிதாவும் சவிதாவின் சத்தியத்தை நம்பி தொப்பியைக் கொடுத்தாள்.

  

கவிதாவைப் போலவே தொப்பி வாங்கிய சவிதா, அதற்கு பிறகு அதைப் பற்றி மறந்தேப் போனாள்.

  

காலையில் எக்ஸ்கர்ஷனுக்காக சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு கிளம்பிச் சென்றாள் சவிதா.

  

கவிதாவோ ரெடியாகி விட்டாலும், சவிதா தொப்பியை கொண்டு வருவாள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள். நேரம் போனதே தவிர சவிதாவை காணோம். வேறு வழி தோன்றாமல் சவிதாவின் வீட்டிற்கு சென்றாள். அங்கே தோழி கிளம்பி சென்று விட்ட தகவல் தான் கிடைத்தது.

  

வருத்தத்துடன் ஸ்கூல் நோக்கி ஓடினாள் கவிதா. ஆனால் அவள் ஸ்கூலுக்கு சற்று தொலைவில் இருக்கும் போதே எக்ஸ்கர்ஷனுக்கான பஸ் கிளம்பி செல்வது தெரிந்தது.

  

கவிதா அழுதுக் கொண்டே நின்றாள்.

  

  

இதற்கு காரணம் என்ன? சவிதா தான் கொடுத்த சத்தியத்தை மறந்து வார்த்தை தவறியது தான்.

  

கருத்து:

எனவே குழந்தைகளே எப்போதுமே இப்படி நம்மை நம்பியவரை வருத்தப் படுத்தும் விதத்தில் நடக்காதீர்கள்.

  

எல்லோருமே தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற கற்றுக்கொண்டால் நாம் அவ்வப்போது எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி இருக்கும் பல பிரச்சனைகள், வருத்தங்களை எளிதில் தவிர்த்து விடலாம்.

  

சத்தியம் தவறேல்!  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.