குட்டிக் கதைகள் – 65. நண்பர்கள்
ஒரு பெரிய மரத்தில் இரண்டுப் கிளிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அவை இரண்டும் இறை தேடி சென்றப் போது ஒரு வேடன் அந்த கூட்டில் இருந்த இரண்டு குஞ்சுகளை திருடி எடுத்து வந்தான்.
ஒரு பறவை மட்டும் வேடனின் கையில் இருந்து தப்பித்து பள்ளி ஒன்றை சென்று அடைந்தது. வேட்டைக்காரன் மற்ற கிளியை கூண்டில் வைத்தான்.
பள்ளியில் தஞ்சமடைந்த பறவை அங்கே இருந்த ஆசிரியர்களின் அன்பான, கண்டிப்பான வார்த்தைகளை கேட்டு வளர்ந்தது.
வேடனின் வீட்டில் வளர்ந்த கிளியோ மூர்க்கமான, கோபமான வார்த்தைகளை கேட்டு வளர்ந்தது.
ஒரு நாள், ஒரு வழிப்போக்கன் வேட்டைக்காரனின் குடிசைக்கு வெளியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
வெளியே யாரோ இருப்பதை தெரிந்துக் கொண்ட கிளி, “முட்டாளே, நீ ஏன் இங்கே இருக்கிறாய்? முட்டாள்! ஒடு! நான் உன் தொண்டையை கிழித்து விடுவேன்” என்று கிரீச்சிட்டது.
வழிப்போக்கன் பயந்து அங்கே இருந்து ஓட்டம் எடுத்து பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்தின் அருகே வந்தான்.
அங்கே இருந்த கிளி, “மாலை வணக்கம். உட்காருங்கள். ” என்றது.
ஆச்சரியப்பட்ட வழிப்போக்கன், அந்த கிளியிடம் அதை போன்ற இன்னொரு கிளியை வேறு இடத்தில் சந்தித்ததாகவும், அது மிகவும் முரட்டுத்தனமாக பேசியதாகவும் கூறினார்.
“நீ மட்டும் எப்படி இவ்வளவு அன்பாக பேசுகிறாய்? ”
"நீங்கள் பார்த்த கிளி என் சகோதரனாக இருக்க வேண்டும். நான் இங்கே பள்ளியில் ஆசிரியர்கள் உடன் வாழ்கிறேன். என் சகோதரன் வேட்டைக்காரர்களுடன் வாழ்கிறான். நான் ஆசிரியரின் மொழியைக் கற்றுக்கொண்டேன். என் சகோதரன் வேட்டைக்காரரின் மொழியைக் கற்றுக்கொண்டான். நாம் யார் என்பதை நம்முடன் இணையாக இருப்பவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.” என்று பதில் சொன்னது கிளி.
கருத்து
நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருக்க விரும்பினால் நல்ல நண்பர்களுடன் இருங்கள்.