(Reading time: 4 - 7 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

  

“சரி நான் உங்களை உள்ளே நுழைய அனுமதித்தால் எனக்கு என்ன தருவீர்கள்?

  

“அரசர் எனக்குக் கொடுப்பதில் பாதி உனக்கு தான்.”

  

அதைத் தான் அந்த காவலனும் விரும்பினான்.

  

“நீங்கள் உள்ளே செல்லலாம். ஆனால் நீங்கள் பெறுவதில் பாதி எனக்கு என்று நினைவில் கொள்ளுங்கள்.”

  

ராமன் பார்வையாளர் மண்டபத்தின் கதவை அடைந்தப் போது இன்னொரு காவலாளி அவனை தடுத்து நிறுத்தினான்.

  

“நில்லுங்கள். யாரும் உள்ளே நுழையக் கூடாது”

  

“தயவுசெய்து என்னை தடுத்து நிறுத்தாதே. என் வெகுமதியை பெற்றுக் கொள்ள அரசர் வரச் சொல்லி இருக்கிறார்.”

  

இந்த காவலாளியும் பேராசையுடன்,

  

“நீங்கள் உள்ளே நுழையுங்கள். ஆனால் அரசர் கொடுப்பதில் பாதியை எனக்குத் தர வேண்டும்” என்றான்.

  

“அதனால் என்ன தருகிறேன்!”

  

ராமன் மண்டபத்திற்குள் விரைந்தான்.

  

சத்தம் போடாமல் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்து ரசித்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.