குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 5. சாட்சிகள் மெய்யா, பொய்யா?
ஒரு நாள், அரசர் கிருஷ்ணதேவராயர் அவரது அரசரவையில் அமர்ந்திருந்தார். திடீரென்று, ராமு என்ற ஒரு ஏழை நீதிமன்றத்திற்குள் வந்து, “அரசே! எனக்கு நீதி வேண்டும். நான் மிகுந்த சிரமத்துடன் இங்கு வந்துள்ளேன். எனக்கு நீதி கொடுங்கள்” என்று வேண்டினான்.
என்ன என்று அரசர் கேட்ட போது, ராமு தனது கதையைச் சொன்னான்.
என் எஜமானர் வேலையாக வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு குடையை எடுத்துக் கொண்டு அவருடன் வரும்படி எனக்கு உத்தரவிட்டார். அன்று வெயில் கொளுத்தியது. நான் அவருக்கு குடைப் பிடித்துக் கொண்டு நடந்தேன். திடீரென்று, வானத்தில் கரும் மேகங்கள் எழத் தொடங்கின. பலத்த சூறாவளி வீசியது. எதிர்பாராமல் கடுமையான புயல் தாக்கியது.
அதனால் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நாங்கள் இருவரும் அருகில் இருந்த ஒரு பழைய கோவிலுக்குள் ஓடி அங்கே தஞ்சம் அடைந்தோம். கோவில் சுவருக்கு அருகில் ஒரு சிறிய சிவப்பு பையைக் கண்டேன். நான் அந்த பையைத் திறந்தபோது, அதில் பளபளப்பான வைரங்கள் இருப்பதைக் கண்டேன்.
கோவிலில் வைரங்கள் கிடைத்ததால், அவற்றை அரசரிடம் கொடுக்க வேண்டும் என்று என் எஜமானரிடம் சொன்னேன். ஆனால் என் எஜமானர் ‘முட்டாள்தனமாக பேசாதே. உன் வாயை மூடி வை. இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்! நாம் இருவரும் வைரங்களைக் கண்டுபிடித்திருப்பதால், அவற்றை நமக்கிடையே சமமாகப் பிரிப்போம்.’ என்றார். வைரங்களின் ஜொலிப்பு எனக்கும் பேராசையை கொடுத்தது. அதனால் நானும் சம்மதித்தேன்.
நாங்கள் வீடு திரும்பிய பிறகு, என் எஜமானர் என் பங்கை என்னிடம் கொடுக்கவில்லை. அதனால் நான் உங்களிடம் வந்தேன். அரசே, தயவு செய்து எனக்கு நீதி வழங்குங்கள்.