அவளுக்கு அன்றைய மறுநாள் பிறந்தநாள்.
பிறந்தநாள் பரிசாக இந்தப் பேசும் கிளியைத் தன் மகள் இன்பவல்லிக்குக் கொடுக்க முடிவு செய்தார் கண்ணப்பர்.
கடைக்காரனுடன் பேரம் பேசி எழுபது ரூபாய்க்கு அந்தப் பேசும் கிளியை வாங்கிக் கொண்டார்.
அந்தக் கிளியை எப்படி வளர்க்க வேண்டும் எந்த எந்தப் பொருள்கள் கொடுக்க வேண்டும். நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அட்டை ஒன்றையும் கடைக்காரர் கொடுத்தார்.
கண்ணப்பர் வாங்கிவந்த அன்று கிளியைத் தன் அறையிலேயே வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் குளித்து முடித்து. உணவு உண்ணும் முன் இன்பவல்லி தன் அப்பாவை வந்து பார்த்தாள்.
"அப்பா! இன்று என் பிறந்த நாள். வாழ்த்துங்கள்'' என்று கூறி அவருடைய காலடிகளில் விழுந்து வணங்கினாள் இன்பவல்லி.
ஒவ்வொரு பிறந்த நாளிலும் தன் செல்ல மகளுக்கு நல்வாழ்த்துக் கூறுவதோடு ஒரு சிறு பரிசும் கொடுப்பது கண்ணப்பருடைய வழக்கம்.
சென்ற ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு தங்கச் சங்கிலி கொடுத்தார்.
இன்று, தன் அன்பு மகளை வாழ்த்தி அவளுக்கு மிகவும் விருப்பமான பச்சைக் கிளியைப் பரிசாகக் கொடுத்தார்.
இன்பவல்லிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.