(Reading time: 6 - 12 minutes)

அன்புப் பரிசான அந்தப் பச்சைக் கிளியின் பட்டுடலைத் தடவித் தடவித் தன் அன்பை வெளிப் படுத்தினாள்.

  

ஏற்கெனவே பேசத் தெரிந்த பச்சைக் கிளிக்கு மேலும் பல சொற்களைப் பேசப் பழகிக் கொடுத்தாள்.

  

அந்தக் கிளி மிக அறிவுள்ள கிளி. ஒரு தடவை சொன்னால் போதும், அதே சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லும். அழகாகச் சொல்லும்.

  

வீட்டில் உள்ள பூனை மியா மியா என்று கத்தினால் கிளியும் மியா என்று கத்தும். நாய் குரைப்பது போல் குரைக்கும். பசுவைப் போல் அம்மா என்று கத்தும். காக்கையைப் போல் காகா என்று கத்தும். வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் சொற் களையும் அப்படி அப்படியே திருப்பிச் சொல்லும்.

  

இவ்வளவு அழகாகப் பேசும் கிளியைத் தன் உடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் காட்ட வேண்டும் என்று நினைத்தாள் இன்பவல்லி.

  

இன்பவல்லி அறிவுள்ள பெண்ணாய் இருந்தாள். அப்பாவுக்குச் செல்லப் பெண்ணாக இருந்தாள். ஆனால் அம்மா சொல்லும் எந்த வேலையும் செய்ய மாட்டாள்.

  

ஒரு நாள் அம்மா அவளை அழைத்து, ”இன்பவல்லி பக்கத்துக் கடையில் போய் கால் கிலோ பருப்பு வாங்கிக் கொண்டு வா'' என்றாள்.

  

போ அம்மா , உன்னோடு பெரிய தொல்லை' என்று கூறிவிட்டு அறையில் போய்க் கதை படித்துக் கொண்டிருந்தாள்.

  

மற்நொரு நாள். ''இன்பவல்லி , அத்தை வீட்டில் போய் இந்தப் பலகாரங்களைக் கொடுத்துவிட்டுவா என்றாள்.

  

அத்தை வீடு , அதே தெருவில் மூன்றாவது வீடு தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.