குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சிட்டுக் குருவிப் பட்டாளம் - நாரா நாச்சியப்பன்
பாராண்டபுரம் என்று ஒர் ஊர் இருந்தது. அந்த ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அந்த மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள்.
அவள் ஒரே மகள். எனவே பாராண்டபுர மன்னருக்கு அவள் செல்ல மகள்.
அந்தச் செல்ல மகள் விளையாடுவதற்காக மன்னர் ஒரு சோலையை உண்டாக்கினார்.
ஊருக்குப் பக்கத்தில் உள்ள காட்டில் இந்தச் சோலை யமைந்தது.
இதில் நிழல் தரும் பழ மரங்களும், மணந் தரும் பூஞ்செடிகளும், கொடிகளும் வளர்க்கச் செய்தார். எல்லாம் வளர்ந்து ஓர் அழகான பூஞ் சோலையாக மாறிய பின், தன் மகளை அதாவது இளவரசியை அங்கே அழைத்துச் செல்லும் முன் பூஞ்சோலையைப் பார்த்து வரப் புறப்பட்டார் மன்னர்.
அவருடைய அமைச்சர்கள் நான்கு பேரும், மெய்காப்பாளரும் உடன் சென்றனர்.
அந்தச் சோலை மிக அழகாக இருந்தது.
சோலை யருகில் செல்லும்போதே பூக் களின் மணம் மூக்கைக் துளைத்தது.
மன்னர் சோலைக்குள்ளே நடந்து சென்றார்.
கக்கக்கக்கக்
குக்குக்குக்குக்
கக்குக்குக்கக்