(Reading time: 8 - 15 minutes)

குக்கக்கக்குக்

  

என்று சோலை முழுவதும் சிட்டுக் குருவிகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.

  

'இது என்ன ஓசை?’ என்று கேட்டார் மன்னர் சற்றுச் சினத்துடனேயே!

  

'இது சிட்டுக் குருவிகளின் ஒசைl என்று ஓர் அமைச்சர் பதில் அளித்தார்.

  

"சிட்டுக் குருவிகள் இங்கே என்ன செய்கின்றன?” என்று கேட்டார் மன்னர்.

  

'குருவிகள் பறந்து விளையாடுகின்றன’ என்று அந்த அமைச்சர் பதில் அளித்தார்.

  

மன்னருக்குச் சினம் பொங்கிவந்தது.

  

"இளவரசிவிளையாடுவதற்காக அமைத்த சோலையில் சிட்டுக்குருவிகள் எப்படி விளை யாடலாம்? கூப்பிடு காவல் வீரர்களை” என்று பொரிந்து தள்ளினார் மன்னர்.

  

காவல் வீரர்கள் ஓடோடி வந்தனர்.

  

மாமன்னர் வாழ்க!” என்று கூறி வணக்கம் இட்டு நின்றனர்.

  

'இந்தச் சோலை இளவரசி விளையாடு வதற்காக அமைக்கப்பட்டது. இங்கு சிட்டுக் குருவிகளை விளையாட விட்டது தவறு. இன்றே அவற்றை யெல்லாம் இங்கிருந்து அப்புறப் படுத்துங்கள். இது என் கட்டளை’ என்று ஆணையிட்டார் மன்னர்.

  

  

உடனே காவல் வீரர்கள், சிட்டுக் குருவி களை விரட்டத் தொடங்கினர். சிலர் மரங்களில் ஏறி அவற்றின் கூடுகளைக் கலைத்து விட்டனர்.

  

சில வீரர்கள் சிட்டுக் குருவிகளின் மேல் கல்லை விட்டெறிந்தனர். சிலர் கவண் வில்லினால்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.