பிரியாவே வானதியின் மகன், குட்டி கண்ணனை போல் இருப்பதால் "கோகுல கண்ணன்" என்றே பெயரிட்டு அழைத்தாள். வேலை நேரம் முடிந்தும் அவனுடன் பேசி, விளையாடி என்று அவனுடனே நேரத்தை கழிப்பாள். மாலை சீக்கிரம் கிளம்ப சொல்லி நந்தனும் பலமுறை சொல்லிவிட்டான்.... அவள் கேட்டபாடில்லை... இரவு தனியே செல்வதால் அவள் வீடு இருக்கும் தெருவரை அவளுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து அவளது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வான் நந்தன்.
தன்னிடம் எப்பொழுதும் சண்டையிடும் அண்ணனை தான் யாழ் இதுவரை பார்த்திருந்தாள்.... ஆனால் சில நாட்களாய் நந்தனிடம் தெரியும் மாற்றத்தை யாழும் உணர்ந்திருந்தாள். அதனாலே நந்தனிடம் பேச வேண்டும் என பலமுறை முயற்சித்தாள்... நந்தனோ இல்லாத வேலையை இருப்பதாய் சொல்லிக்கொண்டு தாமதமாகவே வீட்டிற்க்கு வருவான். அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே வந்தது அந்த ஒருநாள்....
(மகிழ்ந்திரு)