பெரியவர்கள் அனைவரும் யாழை கண்டிக்க “அவன் தப்பு பண்ணா இப்படி தான் தண்டனை கொடுப்பேன். என்னை யாரும் கேட்காதீங்க…. உங்க எல்லார் சார்பாவும் தான் இப்போ அவனுக்கு நான் தண்டனை கொடுத்துட்டு இருக்கேன்” என்று அவர்களையும் அடக்கி விட்டாள்.
“யாழ் குட்டி போதும் டா கால் வலிக்குது டென் சிட்டப்ஸ் போட்டுட்டேன்” என்று நந்தன் கெஞ்ச “சரி போனா போகுதுனு மன்னிச்சு விடுறேன். மறுபடியும் ஏதாவது தப்பு பண்ண டென், ட்வெண்டி ஆகிடும் ஜாக்கிரதை” என செல்லமாய் மிரட்டிக்கொண்டிருந்தாள்.
நந்தனின் இருபுறமும் யாழும் கொளசியும் நின்று கொண்டு “யாரு னா அந்த பொண்ணு?” என்று கொளசி கேட்க “யாரை கேட்குற டா?” என்றான் நந்தன்.
“டேய் நடிக்காத நீ இப்படி எரும மாட்டு மேல மழை பேயும் போது நிக்குற மாதிரி அமைதியா பேசுனா உன்னை நாங்க நம்பிடுவோமா ஒழுங்கா சொல்லிடு இல்ல மறுபடியும் சிட்டப்ச் தான்” என்று யாழ் சீண்ட
“அம்மா தாயே…. விட்ரு மா நான் சொல்லிட்ரேன்” என கையெடுத்து கும்பிட்டான் நந்தன்.
“அது அந்த பயம் இருக்கட்டும்…. இப்போ சொல்லு யாருனு” என தோரனையாய் கேட்டுக்கொண்டிருந்தாள் யாழ்.
இதுநாள் வரை நடந்தவற்றை அவர்களிடம் கூறவும் இருவருக்குமே ப்ரியாவை நினைத்து கவலையாக தான் இருந்தது.
சிறிது நேர அமைதிக்கு பின் யாழே தொடந்தாள் “டேய் நந்து தனியா வளர்ந்த பொண்ணுங்க குழந்தைங்க மாதிரி… என்ன தான் அவங்களை ரொம்ப தைரியமா காட்டிக்கிட்டாலும் அவங்க மனசு ஒவ்வொரு விசயத்துக்கும் ஏங்கிட்டு தான் இருக்கும். எல்லாத்தையும் பகிர்ந்துக்க ஒரு ஆள் இல்லைனு வருத்தப்படுவாங்க ஆனா வெளிய அவ்வளவு சந்தோசமா தன்னை காட்டிப்பாங்க. அவங்களை முழுசா புரிஞ்சிக்கனும். அவங்க வேண்டாம்னு சொன்னா அது அவங்களுக்கு தேவைனு தெரிஞ்சிகனும். அவங்க போட்டு வைச்சு இருக்க கோட்ட தாண்டி அவங்களை கொண்டு வரனும்” என்று விடாமல் பேசிக்கொண்டே போக அதில் இருந்த அர்த்தத்தை உணர்ந்தவன் விளையாட்டாய்
“என்ன கொளசி உன் தோழிக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கு போல பயங்கரமா பேசுறாங்க” என்று கிண்டலடிக்க
“அண்ணா நீங்க இனி நடந்து போக மாட்டீங்க போல இருக்கே உங்க ஹொச்பிட்டல இருந்து ஒரு ச்ட்ரெட்சர் பார்செல் சொல்லிடவா” என கொளசியும் கேலி பேச எதையோ தேடிய யாழின் கைகளில் ஒரு உருட்டு கட்டை கிடைக்க நந்தனை அடிக்க விரட்டிக்கொண்டிருந்தாள்.