(Reading time: 8 - 15 minutes)

இன்று ஒப்பந்த அடிப்படையில் கடைகளுக்கு மொத்தமாக புடவை வாங்குபவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் இதே விலையில் புடவைகள் வழங்கப்படும்.” என்றும் இதர சலுகைகளும் அறிவித்திருந்தது அந்த விளம்பரம். 

 

அதை பார்த்த சக்திவேல் தாத்தா, “ஆதி இங்க வா” என குரல் கொடுத்தார். 

 

“சொல்லுங்க தாத்தா” என்றவனிடம் அந்த விளம்பரத்தை காட்டினார். 

 

“நானும் பார்த்தேன் தாத்தா. ஆனா இந்த விலைல அதும் ஒரு வருசத்துக்கு அவங்கலால எப்படி புடவை தர முடியும்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்.” 

 

"ஆதி ஜார்ஜ் இந்த ஊருலே இல்லைனு சொன்ன அப்பறம் எப்படி அந்த சாஸ்த்தா டீல் அவனுக்கு போச்சு இப்போ இப்படி ஒரு விளம்பரம் வேற கொடுத்து இருக்கான்." 

 

“ஆமா தாத்தா அவருக்கு உடம்பு சரியில்லை னு டெல்லி போனதா நம்ம ரவி சொன்னான். இப்போ இதை ஓவர்டேக் பண்ணி இருப்பது அவரோட டாட்டராம்.” என ஆதி கூறி முடிக்க 

 

“யாரு நான்சியா?” என அதிர்ச்சியுடன் கேட்டார் நந்தகோபாலன். 

 

“ஆமா பா. நான் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன். ஒன் மந்த் தாவே நான்சி பேருல தான் எல்லாம் நடக்குது. ஜார்ஜ் எல்லா பவரும் அவளுக்கு கொடுத்து இருக்காரு பா.” என ஆதி சொல்வதை கேட்ட நந்தகோபாலன் 

 

“ஓஹ் அதனால தான் நான்சி ஹாச்பிட்டல் வரது இல்லையா. இதை எப்படி நான் இவ்வளோ கேர்லெஸ்சா விட்டேன்.” என தனக்குள்ளே சிந்திக்க ஆரம்பித்தார். 

 

அப்பொழுது சக்திவேல் தாத்தவிற்கு அழைப்பு வர “இதோ அரை மணி நேரத்துல நாங்க அங்க இருப்போம். உடனடியா ஆம்புலன்ஸ் கூப்பிட்டு பாதிக்கபட்டவங்களை மருத்துவமனை அழைச்சுட்டு போங்க” என பேசி முடித்தார். 

 

 

(மகிழ்ந்திரு)

 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.