நடந்து முடிந்து விட்டது. கோபால கிருஷ்ணன், மாசிலாமணி குடும்பத்தை ராமப் பட்டணத்துக்குப் பத்திரமாகத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்."
"என்னால் இதை நம்பவே முடியவில்லை" என்றாள் பவானி. "கோபாலகிருஷ்ணனுக்கு இவர்கள் திட்டத்தைப் பற்றி நான்தான் கூறினேன். 'இந்த வாலிபர்களின் விபரீதப் போக்கைத் தடுத்து நிறுத்த உங்களால்தான் முடியும்' என்றேன். அவரும் அவர்களோடு கல்யாணத்துக்குக் கிளம்புவது போல் சென்று கண்காணித்துக் கொள்வதாக வாக்களித்தார்."
"அப்படிக் கூறி உங்களை ஏமாற்றினாரோ அல்லது வழியில் மனம் மாறி அந்த உதவாக்கரைகளுடன் சேர்ந்து கொண்டாரோ, எப்படியானாலும் அவர் கலாட்ட நடந்த சமயம் திருமண மண்டபத்துக்கு வரவேயில்லையே. ஏன்? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே தகம்பனாரும் மகனும் எத்தனை காலமாகத் திட்டம் போட்டிருந்தார்களோ, எனக்குப் பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும்" என்றார் ரங்கநாதன்.
பவானி சற்று நேரம் யோசித்துவிட்டு, "நீங்கள் கேஸ் போடுவதற்குப் பதிலாக கமலா வீட்டார் போட்டால் நன்றாயிருக்குமே" என்றாள்.
"எப்படியோ பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தாகி விட்டது" என்று தீர்மானமாகச் சொன்னார் ரங்கநாத முதலியார்.
----------------
தொடரும்...