”டாக்டர்! காமாட்சிக்கு ஆறு மாசங்களாக ஒரு பைத்தியம். விளையாட்டுப் பொம்மைகள், சிறு கார்கள். குழந்தை சைக்கிள் . என்று இப்படி வாங்கி வருகிறாள். இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு தனக்குத் தோன்றியவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விடுகிறாள். அவளுடைய இந்தப் போக்கு எனக்குப் புரியவே இல்லை ...."
காமாட்சி தகப்பனார் கூறியதைக் கேட்டபடி முறுவலித்துக் கொண்டே நின்றாள்.
டாக்டர் ஸ்ரீதரன் இதற்குப் பதில் அளித்தார் :
”மனிதனுடைய மனம், சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். பல ரகச் சீட்டுக் கட்டுகளை வாங்கி மேஜை மீது வைத்திருப்பார். அப்படி அவருக்குச் சீட்டாட்டம் நன்றாகத் தெரியும் என்றோ அதில் விருப்பம் கொண்டவர் என்றோ கூற முடியாது. யாராவது குழந்தைசள் வந்து கேட்டாலும் கொடுத்து விடுவார். எதற்கு வாங்குகிறார். எதற்காகக் கொடுக்கிறார் என்பது பலருக்குப் புரியாது. இப்படி ஒரு போக்கு" என்றார்.
வேதாந்தம் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந் திருந்தார்.
--------------
தொடரும்...