"உனக்கெப்படித் தெரியும் அவர் ஊரில் இல்லேன்னு."
"எப்படியோ.." என்றான்.
அவனிடமிருந்த கைப்பையை வெடுக்கென்று வாங்கிக் கொண்ட பாகீரதி,
"என்னடா கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டாள்.
"பாருங்க."
பச்சை திராட்சையும் சமித்துகளும் இருந்தன.
"ஏன் ஒரு மாதிரி இருக்கே, அக்கா?"
"உற்சாகமாத்தானே இருக்கேன். ஏன், உனக்கு அப்படித் தோண்றதோ?
"இல்லே: மூஞ்சி சொல்றதே!"
கொஞ்சம் தயங்கியவள் குரலைத் தாழ்த்தி, "மூர்த்தியைக் காணோம்டா, ரெண்டு நாளாச்சு, எனக்கு பயமாயிருக்குடா!" என்று சோகமாய்த் தழுதழுத்தாள்.
"தஞ்சாவூர்ல பார்த்தனே அவனை.
"பார்த்தியா என்னடா சொன்னான்?"
"இந்தப் பாடசாலைக்கு இனி வரப் போறதில்லையாம். வேதமும் படிக்கப் போறதில்லையாம்"
”ஏனாம்?”
"கேட்டனே? அதெல்லாம் சொல்ல முடியாதுன்னுட்டான். "இந்தா, இந்த திராட்சையையும்