"நீதான் வரமாட்டங்கறயே ! என்னைத் தேட வேணாம்னு கனபாடிகளுக்குக் கடுதாசி வேற எழுதிப் போட்டுட்டே ! உன் லெட்டரைப் படிச்சுட்டு அவர் எப்படி தேம்பித் தேம்பி அழுதார் தெரியுமா?"
"வேற எங்கயாவது பாடசாலை இருந்தா சேர்ந்து படிக்கலாம்."
"இந்த ஊர்லயே ஒரு பாடசாலை இருக்கு ! எங்க மாமாதான் அதுக்கு போஷகர். என்கிட்ட ரொம்ப அபிமானம் அவருக்கு. கவலைப்படாதே! நான் சொன்னா நாளைக்கே சேர்த்துடுவார். நீ தான் ஒரு தீர்மானத்துக்கும் வரமாட்டேங்கறயே ! சஞ்சலப்படறயே ! க்ஷண சித்தம் க்ஷணபித்தமா இருக்கயே! இன்னைக்கு வேதங்கறேஒ நாளைக்கு வேணாங்கறே ! முதல்ல மணசை திடப்படுத்திக்கோ…. இன்னொரு ஜாங்கிரி சாப்பிடறயா? எப்படி இருக்கு பார் ரோஜாப்பூ மாதிரி"
"எங்கப்பா கடுதாசி எழுதியிருக்கார்…"
"என்ன எழுதியிருக்கார்?"
" ‘அம்மா சங்கிலியைக் கழுத்தைவிட்டு எடுக்காதே. வேதத்தைப் பாதில நிறுத்தாதே ! கனபாடிகள் பேச்சைத் தட்டாதே’ன்னு முக்கியமா மூணு விஷயம் எழுதியிருக்கார்."
"வேதத்தை விட்டுட்டே! கனபாடிகள் பேச்சைத் தட்டிட்டே! ரெண்டு விஷயம் போச்சு. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. கழுத்துச் சங்கிலியை விட்டு வெச்சிருக்கே!"
"இப்ப அதையும் வித்துடலாம்னுதான் கடைத் தெருவுக்குப் போயிண்டிருந்தேன். நடு வழியில உன்னைப் பார்த்தேன்…"
"சந்தியாவந்தனம் ஒழுங்காப் பண்றயா? தினம் ஒரு ஆவ்ருத்தியாவது வேதம் சொல்றயா?"
"சத்திரத்துக்குப் பக்கத்துலயே புது ஆறு ஒடறது ! காவேரித் தண்ணிதான். ஸ்நானத்துக்கு அங்க