எமர்ஜன்ஸி வார்டுக்குப் போய் கட்டில் கட்டிலாக மஞ்சுவைத் தேடினான்.
குறுக்கே வந்த நர்ஸ் ஒருத்தி "யாரைத் தேடுது தம்பி? “ என்று கேட்டாள்.
"வயத்துலே கத்தி பாஞ்சுட்டுதே…"
“ஓ, அந்தக் கேஸா? ஆபரேஷன் தியேட்டர்ல இருக்குது. தையல் போட்டுக்-கிட்டிருக்காங்க, கத்தி ஆழமாப் பாஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்துல ஸ்ட்ரெச்சர்ல கொண்டு வருவாங்க… வெய்ட் பண்ணு."
"உயிருக்கு ஆபத்து இல்லையே? பிழைச்சுடுவளா?"
"பெரிய டாக்டர் வருவார். கேளு….
காத்திருந்த சில நிமிடங்கள் சில யுகங்களாய் நீண்டன.
கடைசியில், மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஏழாம் நம்பர் கட்டிலில் கிடத்தினார்கள்.
அவள் கண்களை மூடி மயக்க நிலையில் இருந்தாள்.
டாக்டர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தார்கள்.
"பயமில்லையே டாக்டர் !" என்று பெரிய டாக்டரை அணுகிக் கேட்டான் மூர்த்தி.
"நிறைய ரத்தம் சேதாரமாயிருக்கு. ஸீரியஸ் கேஸ்தான். நீ யார்?" என்று கேட்டுவிட்டு, ‘உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ என்பது போல் பார்த்தார்.
"அவளுக்குத் தெரிஞ்சவன், நான் ரத்தம் தரலாமா?!" என்று கேட்டான்.
மூர்த்தியின் ரத்தத்தைப் பரிசோதித்தார்கள். பொருந்துகிறது என்று தெரிந்ததும் ஏராளமான