(Reading time: 7 - 14 minutes)
Vetha Vithu - SaVi
Vetha Vithu - SaVi

"கிட்டா இல்லையா? எங்கே போனான்?"

   

"காஞ்சீபுரம் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. பங்குனி உத்திரம் பார்த்துட்டு வந்துருவான். நீ இன்னைக்கே போகணுமா?"

   

"தெரியலை, கனபாடிகளைத்தான் கேட்கணும்" என்று பிடிகொடுக்காமல் பேசினான்.

   

திருக்குறள் புஸ்தகத்துக்கு அட்டை போட்டு அனுப்பி யிருந்தனே, பார்த்தயா?"

   

"பார்த்தேன். உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். அந்தக் கடனை எப்ப எப்படி திருப்பித் தரப் போறேனோ, தெரியலை."

   

"அதுக்கென்ன? சந்தர்ப்பம் வராமலா போயிடும்? அப்ப வட்டியும் முதலுமாச் சேர்த்துக் கொடுத்துடு. அது சரி; அட்டைக்குள்ளே வேற ஒண்ணும் பார்க்கலையா?"

   

"பார்த்தனே!..."

   

"அதைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டேங்கறயே!"

   

"எனக்கு பயம்மா இருக்கு…" என்றான்.

   

"என்ன பயம்? ஏன் பயப்படறே? எதுக்கு பயம்?"

   

"உன்னை நினைச்சுத்தான்…"

   

"என்னைப் பிடிக்கலையா உனக்கு?"

   

"பிடிக்கிறது…"

   

"அப்புறம் என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.