(Reading time: 7 - 14 minutes)
Vetha Vithu - SaVi
Vetha Vithu - SaVi

   

"உன் அளவு தைரியம் எனக்கில்லே. உன்னாலதான் என் பிரம்மசரியமே போச்சு. நீ கெட்டதுமில்லாம என்னையும் கெடுத்துட்டயே!"

   

"நான் கெடுத்தனா! நீயும் சம்மதப்பட்டுதானே கெட்டுப் போனே?"

   

"அந்த மாதிரி ஒரு நிலைல, உன் நிர்ப்பந்தத்துல நான் புத்தி மயங்கிப் போயிட்டேன்."

   

"இது ரெண்டு பேருமே சேர்ந்த செய்த குற்றம்தான். இதுக்கு நான் மட்டும்தான் காரணம்னு சொல்லாதே! நீயும்தான்! இதை நீ அப்பவே யோசிச்சிருக்கணும்!"

   

”எப்ப?”

   

"உன் எச்சிலை நாள் விழுங்கறப்பவும், என் எச்சிலை நீ விழுங்கறப்பவும்…"

   

”சே!”

   

உதடுகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.

   

இச்சமயம் கனபாடிகள் முன்கட்டிலிருந்து "மூர்த்தி !" என்று குரல் கொடுக்கவே "இதோ வந்துட்டேன் !" என்று சொல்லிக் கொண்டே ஓடினான்.

   

"மூர்த்தி ! உன்கிட்ட நிறையப் பேசணும். முக்கியமான விஷயம். ராத்திரி நீ இங்கயே என் கூடவே படுத்துக்க" என்றார் கனபாடிகள்.

   

"அம்மாடி, பாகீரதியிடமிருந்து தப்பினேன்" என்று எண்ணிக் கொண்டான்.

   

அணில் குட்டி ஒன்று கனபாடிகளைச் சற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்தது.

   

"ராமா, இங்க வாடா!" என்று அதைச் செல்லமாக அழைத்தார். அது ஓடி வந்து உரிமையோடு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.