அதன் பிரதிபலிப்பாய்
அவன் தேவைகள் அனைத்தையும்
சிரமேற்க்கொண்டு செய்தாள் அவள்..
அதை அறிந்து கொள்ளவில்லை அவன்....
அவன் கண்முன் வரமாட்டாள் அவள்…
அவளை கண்டால் கோபம் கொண்டு
அவன் நிம்மதியற்று போவான் என்று…
அதையும் உணரவில்லை அவன்....
அவளுக்கு ஆரம்பித்தது சனி
அவன் தங்கையின் பிரசவத்திற்காய்
சென்றிருந்த அவன் தாயின் வருகையில்....
பொறுத்தால்
சகித்தால் அவள்
அவன் தாயின்
தூற்றும் பேச்சை....
அவன் தாயின் மலடி என்கின்ற
ஒற்றை வார்த்தை
அவளை வீட்டை விட்டு
வெளியேறச் செய்தது
இரண்டு மாத
திருமண வாழ்வின் முடிவில்...
அவள் தொலைந்தால் போதுமென்று
அவனும் அவளுக்காய்
பேசவில்லை அவன் தாயிடம்....
இரு வாரங்கள் கழித்து
அவன் தாய் மீண்டும்
தங்கை வீட்டிற்கு செல்ல...
உணர்ந்திருந்தான் அவனும்
அவளின் பிரிவை..
சென்றான் அவள் வீட்டிற்கு
அவளை அழைத்துவர...
அவள் அங்கு இல்லை
என்பதை அறிந்து
இன்று நிற்கிறான் நடுவீதியில்
மனதில் கனத்துடன்
திக்குத்தெரியாத காட்டில் விட்ட
குழந்தையை போல்...
ஓடினான்
தேடினான்
தோழிகளிடம் விசாரித்தான்
எங்கும் இல்லை அவள்....
எங்கோ கேட்ட
கொலைச் செய்திகளும்
சீரழிவு நிகழ்வுகளும்
நினைவுக்கு வந்து
எகிறுகிறது இதயதுடிப்பு
தாறுமாறாய் அவனுக்கு...
ரணமாய் வலிக்கிறது மனம்
அவனின் செயலை எண்ணி....
என்னவாகிற்றோ அவளுக்கென்று
பதறுகிறது நெஞ்சம்....
ஏதும் வேண்டாம் எனக்கு
அவளை தவிற என
அவளுக்காய் ஏங்குகிறது
அவன் மனம் இப்பொழுது...