சென்றான் அவள் அலுவலகத்திற்கு
கண்டான் அவளை....
மனதில் ஆழ்ந்த நிம்மதி
பிரவாகமாய் படர...
காதில் இளையராஜாவின்
இன்னிசை ரீங்காரமிட..
கண்ணில் கோடி மின்னலின்
பிம்பமாய் அவள் பளிச்சிட...
இடம் பொருள் பாராது
ஓடோடிச் சென்று
அணைத்துக் கொண்டான் அவளை...
கதறி அழுதான் மன்னவன்
பொதுஇடம் என்றும்பாராது....
தன் நெடுநேர பரிதவிப்பிற்க்கும்
மனதில் பிரவாகித்த காதலுக்கும்
தன்னுணர்வுகளை
கட்டுப்படுத்தும் வடிகாலாய்
பற்றிக்கொண்டான் அவளை..
கண்ணோடு கண் நோக்கின்
வாய்ச்சொற்களுக்கு ஏது பயன்....
அவளும் உணர்ந்துக்கொண்டாள்
அவனின் ஆழ்மனதின் காதலை
அவனின் பார்வையிலும்
இறுகிய அணைப்பினிலும்.....
மன்னவனின்
காதல் பார்வையில்
அவனுக்கு அழகோவியமாய்
தெரிந்தால் அவள்....
உடல் இளைத்திருந்தால்
அவளும் தன்னவனுக்காக..
கண்டுகொண்டான் அவனும்
அவளணைப்பில்....
எடுத்தான் ஓர் சபதம்
தன் நேசத்தால்
மீண்டும் அவளை
பழையவளாய்
பெருத்த வடிவாளாய்
மாற்றுவேன் என...
தன்னலமற்ற
அன்பு மட்டுமே போதும்
மெய்க்காதலுக்கு...
புற அழகு மாறும்
மன அழகு மாறாது
என உணர்ந்தான் நம் நாயகனும்..
இனி எல்லாம் சுகமே என
காதலில் திளைத்து
இன்பமாய் வாழட்டும்
மங்கையவள்
தன் மணாளனுடன்
என வாழ்த்துவோம் நாமும்......
{kunena_discuss:785}