" நீதாண்டி கரடி ! எவ்ளோ இன்டெரெஸ்டிங்கா ஒரு ஸ்டோரி வந்துச்சு கனவுல.எதுக்குடி என்னை எழுப்பின.லீவ்தானே இன்னைக்கு .கிளைமாக்ஸ் கிழிச்சி கொடுத்த நாவல் படிச்சா எப்படி இருக்கும்.அப்டி இருக்கு எனக்கு.கரடி !கரடி! போடி,நான் திரும்ப தூங்கறேன்,அதே கனவு வந்தாலும் வரும் "
இப்டி சொல்லி தூங்க போன அவளை மொத்து மொத்துன்னு மொத்தி எழுப்பினா அவ பிரண்ட்.
கொலை வெறில இருக்கேன் .உன்னை அப்பறமா கவனிக்கறேன் .அம்மா எத்தனை தடவ போன் செஞ்சாங்க தெரியுமா .அது கூடத் தெரியாம அப்படி தூங்கற.வேற வழி இல்லாம நானே பேசினேன் .ஏதோ ரொம்ப முக்கியமா உன்கிட்ட பேசணுமாம்.எதோ மெயில் அனுப்பிருக்காங்களாம்.அதை பார்த்திட்டு உன்னை உடனே போன் பண்ண சொன்னாங்க.நீ எழும்பற மாதிரியே இல்ல.அதான் எழுப்பினேன் ."
போய் ப்ரெஷ் ஆயிட்டு வந்து மெயில் பார்த்தா.ஒண்ணுமே போடாம ஒரே ஒரு அட்டாச்மென்ட் இருந்துச்சு.அதை ஓபன் பண்ணி பார்த்தா அப்படியே ஷாக் ஆயிட்டா.
கனவுல பார்த்த இளவரசன், ஸ்டைலா போஸ் கொடுத்து சிரிச்சிட்டு இருந்தான் போட்டோல.
உடனே அம்மாக்கு போன் செஞ்சா.
அவங்க பங்குக்கு அவங்களும் வசை மழை பொழிஞ்சாங்க.அப்பறம் சொன்னாங்க.
"மெயில் பார்த்தியா.அதுதான் உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளையோட போடோ.எல்லாம் ஒத்து போகுதுடி.நீங்க ரெண்டு பேரும் பார்த்து பிடிச்சிட்டா கல்யாணம் தான்.
பையன் பேர் ப்ரியன்.ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட்ல ஒர்க் செய்யறாராமா.நீ கதை புக் படிக்க வேண்டாம் .அவரே நிறைய கதை சொல்வார்.அதோட மூலிகைகள் பத்தியும் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்காராம்.நீயும் மூலிகை பத்தி நிறைய உளருவியே.நல்லா ஒத்துப்போகும்னு தோணுது .
அவங்க அக்கா வீடு அங்கதான் இருக்கு போல.இப்போ பையன் அங்கதான் இருக்கார்.உனக்கு ஓகேனு சொன்னா இன்னைக்கே ஏதாச்சும் ஒரு கோயில்ல மீட் பண்ணி பேச வைக்கலாம்னு தான் கூப்டேன் ."
அப்பறம் மீட் பண்ணி,கடலை போட்டு கல்யாணம் பண்ணி , மூலிகைகளின் ராணியான கொல்லிமலைலயே போயி ரெண்டுபேரும் செட்டில் ஆயிட்டாங்க .
காதல் ஆராய்ச்சி,மூலிகை ஆராய்ச்சி ரெண்டையும் சேர்த்தே செஞ்சாங்க. ப்ரிய மித்ரா அப்படின்ற பேர்ல ஒரு ஆராய்ச்சிக்கூடம் வச்சாங்க. அவங்களோட ஆராய்ச்சி நிறைய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ரொம்ப உதவியா இருந்துச்சு .மித்ராவும் கனவுல பார்த்த அரண்மனை போல ஒரு வீடு எப்படி கட்றதுன்னு ஆராய்ச்சில இறங்கினா.
அவளோட இந்த ஆராய்ச்சியும்,காதலும்,சேவையும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுவோம்.
{kunena_discuss:785}