(Reading time: 10 - 20 minutes)

"வேலைக்கு போனதுக்கு பின்னாடி நேரம் கிடைக்கும் போது போவேன்... அப்படி ஒரு நாள் உன்னை அங்கே பார்த்தேன்.... "

"ஒரு தாத்தா கிட்ட கைகளை ஆட்டி ஆட்டி கதை சொல்லிட்டு இருந்த... அந்த அழகிய துறு துறு கண்களும் கதை சொன்னிச்சு உன்னோட சேர்ந்து... நான் அந்த கண்களை தான் இமைக்காம தூரத்துல இருந்து பாத்துட்டு இருந்தேன்.."

"அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன் நீயும் என்னை போல அங்க ஒரு மெம்பர்னு... அப்பவும் காதல் வரலே..

உன்னை போல சேவை மனப்பான்மை உள்ள ஒரு பொண்ணை கட்டிக்கிடனும்னு ஆசை வந்துச்சு...."

அதே அழகிய விழிகளால் இமைக்காது தன்னவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவள்...

இவனும் தன்னை போல தான் என்கின்ற இனிய பரவசத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்...

அவனே தொடர்ந்தான்...

" எனக்கு பெண் பார்க்கலாமானு அம்மா கேட்டதும் என் கண் முன்னாடி மின்னலென வந்து போனது உன் முகம் தான்... ஆனால் வீட்டில பார்க்கும் பெண்ணை தான் மணம் செய்வேனு குறிக்கோளோட வாழ்ந்துட்டு இருக்கிறவன் நான்... என் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் எல்லாமே என் மனைவிக்கு மட்டும் தான்கிற வைராக்கியம் எனக்கு எப்பவுமே உண்டு... அதனால அம்மாகிட்டயே உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை பார்த்துட்டு சொல்லுங்க.. நான் முடிவு சொல்றேனு சொல்லிருந்தேன்... "

 "அப்ப அம்மா ஜாதகம் குடும்பம் எல்லாமே ஒத்துபோகுதுப்பா...

நீ தான் பார்த்துட்டு சொல்லனும்னு ஒரு போட்டோ கொடுத்தாங்க..."

"எனக்காக பார்த்திருக்க முதல் பொண்ணு எனக்கு பிடித்த மாதிரி இருக்கனும் கடவுளேனு வேண்டிக்கிட்டே போட்டோ வெளிய எடுத்தேன்...."

"அதே அழகான துறு துறு கண்களால் என்னிடம் கவிதை பேசும் லுக் ல அந்த குட்டிப்பொண்ணு... அந்த செகண்ட் அவள் கண்கள் என் பார்வையில் ஊடுருவி என் நெஞ்சை நிறச்ச பீல்... என் மனசு புல்லா ஆக்குபை செஞ்சுட்டா.... அந்த கணம் அவ மேலே இருந்த என் பார்வை காதல் பார்வையா மாறிச்சு.. இந்த ஜென்மத்துல இவ தான் என் பொண்டாட்டினு தீர்மானிச்ச தருணம்.. எனக்குள் காதல் மலர்ந்த தருணம் அதுதான்...."

என்று கூறி அவளை பார்த்து கண் சிமிட்டினான்....

அடுத்த நொடி தன்னுள் உணர்வு வெள்ளம் பீறிட்டு எழும்ப அவனை தாவி அணைத்திருந்தாள் அவள்...

அந்த துறு துறு விழிகளில் ஆனந்த நீர் கண்ணை மறைக்க.. தன் இதழால் அதற்கு அணையிட்டு தன்னுள் விழுங்கினான் அவன்... அவள் விழிகளில் ஒற்றி எடுத்தான் தன் இதழை....

 "சரி என் மதுகுட்டிக்கு எப்ப என் மேல லவ் வந்துச்சாம்...."

அவளை தன் கை அணைப்பிற்குள்ளேயே வைத்து கேட்டான் அவன்...

" இதை ஏன் முன்னாடியே என் கிட்ட கேட்கலை..."

அவன் முகம் நோக்கி தன் விழிபார்வையை வீசி உற் என முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் அவள்...

" ஹா ஹா ஹா.... என் செல்லகுட்டிக்கு எவ்ளோ கோபம் வருது.."  அதையும் ரசித்தான் அவன்...

அவளின் கோப பார்வையை தன் விழுங்கும் பார்வையால் நாணப் பார்வையாய் மாற்றினான் அவன்...

" பேச்ச மாத்தாதீங்க மதிப்பா"

தன் நாண முகத்தை அவனுள்ளேயே மறைத்து வினவினாள் அவள்....

அவளை தன் மடியில் அமர வைத்து அவள் இடையை சுற்றி கைகோர்க்க..

அவள் தன் முகத்தை அவன் மார்பினில் சாய்திருக்க... தொடர்ந்தான் அவன்....

" நீ என்னை லவ் பண்றியாங்கறது தான் முக்கியம்டா மதுக்குட்டி... அது தான் உன் துறு துறு கண்ணுல டண் டண்ணா வழியுதே...

அப்பறம் எதுக்கு காதல் வந்த நேரம் காலம் லாம் கேட்டுக்கிட்டு...."

" பொதுவாகவே ஆண்கள் அப்படி தான்டா.... தன் மேல அவங்க விரும்புற பொண்ணுக்கு காதல் வந்தா போதும் அவங்களுக்கு...

பொண்ணுங்க மாதிரி அலசி ஆராய்சிட்டு இருக்க மாட்டாங்க..."

" சரி... உங்களுக்கு தான் தெரிஞ்சிக்கிற ஆர்வம் இல்லல அப்பறம் நான் ஏன் சொல்லனும்"

"அடியேய், இதெல்லாம் டூ மச்... சும்மா இருக்கவனே சீண்டி விட்டுட்டு இப்ப சொல்ல மாட்டேனா என்ன அர்த்தம்..

இப்ப சொல்லல உன்னை இங்கிருந்து நகர விடமாட்டேன்"

" அப்படி வாங்க வழிக்கு... இந்த ஆர்வம்.. இந்த ஆர்வம் தான் வேணும் எனக்கு" என கூறி குலுங்கி சிரித்தாள் அவள்....

"நான் உங்கள முதல எங்க பார்த்தேன் தெரியுமா??"

"என்னடி நீயும் புதிர் போடுற.. பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடியே என்னை எங்கேயாவது பார்த்திருக்கியா நீ???"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.