பேரன் சோகத்தை மறந்து வாய்விட்டு சிரித்தான்.
"தாத்தா! அஸ்வின் போலர், பேட்ஸமனில்லே, சிக்ஸர் அடிக்கிற கோலியும், தவானும், ராகுலும், கோட்டைவிட்டுட்டாங்க! அஸ்வினாலே சிக்ஸர்லாம் அடிக்கமுடியாது, தாத்தா!"
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மைதானத்தில் கரவொலிக்கிடையே, பந்து வானத்தில் உயரே பறந்து எல்லைக்கோட்டையும் தாண்டி, பெவிலியனில் அமர்ந்திருந்த மக்கள் மத்தியிலே விழுந்தது!
நம்பமுடியாமல் ஆச்சரியத்தில் திணறிய பேரன், 'தாத்தா' என அலறியவாறே அவரை கட்டியணைத்து முத்தமிட்டான்.
"எப்படி தாத்தா, கரெக்டா சொன்னே? நான்தான் மறந்துட்டேன், அஸ்வின் போன வருஷம் ஒரு மேட்சிலே நூறு ரன் எடுத்தான், தாத்தா! நீ சொன்னாமாதிரி, இன்னொரு சிக்ஸரும் அடிச்சுட்டான்னா, இந்தியா நிச்சயம் வெற்றி அடைஞ்சுடும்!"
அவன் பேசி முடிக்குமு
...
This story is now available on Chillzee KiMo.
...
மாவோ, நான் அவங்க நினைக்கிறதுபோல, நடந்துக்கலையேங்கிற ஆதங்கத்திலே, என்னை கோவிச்சுக்கிறாங்க. என்மீதுள்ள பாசத்திலேதான் அப்படி நடந்துக்கிறாங்க, அதை நான் நம்பறதினாலே எனக்கு அவங்கமேலே கோபமே வராது. நீ சீனுவுக்கு புத்தி சொன்னாமாதிரி, அவங்களே கொஞ்ச நேரம் ஆனதும் படபடப்பு அடங்கினதும், புரிஞ்சுக்குவாங்க!"