(Reading time: 16 - 31 minutes)

சிறுகதை - பூ மரம் - நித்யஸ்ரீ

flowerTree

காலை வேலையில் பரபரப்பாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த தன் மகனிடம் சென்று லட்சுமியம்மாள் ஏம்பா சிவா சாயங்காலம் வரும் போது இந்த மருந்து கொஞ்சம் வாங்கிட்டு வர்றீயா ? ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு.

சரிம்மா நான் வாங்கிட்டு வர்றேன் கொடுங்க...என்ற படியே, சக்தி டிபன் ரெடியா ...? சீக்கிரம் எனக்கு நேரம் ஆகுது பார்.என்று சமையலறையை நோக்கி தன் மனைவிக்கு குரல் கொடுத்தான் சிவா.

ம்..ம்.. ஒரு ஐந்து நிமிஷம் இருங்க சட்னிய மட்டும் தாளிக்கனும்.

என்ன சக்தி ஏற்கனவே எனக்கு லேட் ஆயிடுச்சி கொஞ்சம் சீக்கிரமா ரெடி பண்ண கூடாதா என்றான் சற்று கடுப்புடன்.

எனக்கென்ன பத்து கையா இருக்கு எல்லாரையும் போல ரெண்டு கைதானே இருக்கு. நான் மட்டும் ஒருத்தியா எத்தனை வேலை தான் செய்ய முடியும். காலையில் எழுந்திருச்சு துணி துவைச்சு எல்லாருக்கும் நான் தானே வடிச்சு கொட்டனும். அது போதாதுன்னு உங்கம்மாக்கு வேற சேவை செய்யனும் என்று புலம்பிக் கொண்டே சட்னியை தாளிப்பது போல் தன் கணவனையும் மாமியாரையும் தாளித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா... அம்மா.. என்னோட கணக்கு புத்தகம் காணோம் வந்து தேடி கொடும்மா என்று சிணுங்கிய படியே வந்தான் அவர்களின் ஏழு வயது சிறுவன் ஹரிஷ்.

உங்கப்பாவும் உன் பாட்டியும் என் உயிர வாங்கறது பத்தாதுன்னு நீ வேற ஏண்டா ஹோம் வொர்க் பண்ணிட்டு எங்கேயாவது தூக்கி எறிய வேண்டியது அப்புறம் ஸ்கூலுக்கு போகற நேரத்துல வந்து என் உயிர வாங்கு. உங்கப்பா சும்மாதானே இருக்காரு போய் கேளு என்று விரட்டினாள்.

அப்பா என்னோட கணக்கு புக்க காணோம் கொஞ்சம் தேடி கொடுங்க என்றான்.

சரிடா கண்ணா அப்பா தேடி தர்றேன் நீ அழாதே வா உட்காரு. என்று சமாதான படுத்தி அவன் கணித புத்தகத்தை தேடிக் கொடுத்து ஹரிஷை பள்ளிக்கு கிளப்பினான் சிவா.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

டிபன் ரெடி சாப்பிட வாங்க உங்கம்மாவையும் சாப்பிட கூப்பிடுங்க. ஹரிஷ் வா வந்து சாப்பிடு ஸ்கூல் வேன் வர்ற நேரம் ஆயிடுச்சு. என்று தன் மகனுக்கு இரண்டு இட்லியை ஊட்டி விடவும் பள்ளி வேன் வரவும் சரியாக இருந்தது.ஹரிஷை பள்ளிக்கு அனுப்பி விட்டு தானும் அலுவலததிற்கு கிளம்பினாள் சக்தி.

ஏன் சக்தி அம்மாவ ஒரு வார்த்தை சாப்பிட கூப்பிட்டா என்ன குறைச்ஞா போயிடுவ..?

இங்க பாருங்க காலையிலேயே உங்க கூட மல்லுகட்ட எனக்கு நேரம் இல்ல. எனக்கு ஆபிஸுக்கு நேரம் ஆகுது. உங்களுக்கு இப்ப நேரம ஆகலையா...? எங்கூட சண்ட போட மட்டும் உங்களுக்கு நேரம் இருக்குமே..?

அம்மா நீங்க சாப்பிட வாங்க என்று தன் அம்மாவை அழைத்து ஒரு தட்டில் மூன்று இட்லிகளை வைத்து சட்னியை ஊற்றினான். அதை அமைதியாய் சாப்பிட்டு விட்டு எழுந்தாள் லட்சுமியம்மாள்.வழக்கமாய் இது போன்ற சண்டைகள் நடப்பது இயல்புதானே என்று அதை பெரிதாக எண்ணிக் கொள்ளாமால் அமைதியாய் சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தார் லட்சுமியம்மாள்.

சிவா, சக்தி இருவருமே சாப்பிட்டு முடித்ததும் ஒன்றாகவே அலுவலகம் கிளம்பினார்கள்.

மாலையில் அலுவலகம் முடிந்து வந்த சிவா, வாங்கி வந்த இருமல் மருந்தை தன் அம்மாவிடம் கொடுத்தான். இந்தாங்கம்மா. நீங்க கேட்ட இருமல் மருந்து. மதியானம் சாப்பிட்டிங்களா...? என்றான் உண்மையான பாசத்தோடு. மனைவிக்கு பிடிக்க வில்லை என்பதற்காக தனக்கு அம்மா இல்லை என்று ஆகி விட முடியாதே தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆயிற்றே..!சிறு வயதிலேயே தன் தந்தை இறந்த பிறகு தன் அன்னை அவனை வளர்க்க என்ன கஷ்ட்டப் பட்டாள் என்று அவனுக்குத்தானே தெரியும். நேற்று வந்த ஒருத்திக்காக எப்படி தன் அம்மாவை அவனால் விட்டு தர முடியும். ஆனால் அவனால் அவன் மனைவியையும் கட்டுபடுத்திட முடியவில்லை. அம்மா சக்தி பேசறத எதும் நீங்க மனசுல வச்சிக்காதீங்க. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

போகும் தன் மகனையே பார்த்து கொண்டிருந்தார் லட்சுமியம்மாள்.

நாட்கள் செல்ல செல்ல சக்திக்கு தன் மாமியாரின் மேல் இன்னும் வெறுப்பு கூடிக் கெண்டேதான் போயிற்றே தவிர குறையவில்லை.அப்படித்தான் ஒரு நாள் லட்சுமியம்மாவிற்கு மிகவும் உடல் நிலை முடியாமல் போனது. குடிக்க வெண்ணீர் வேண்டும் தேவைப் பட சக்தியிடம் கேட்டால் அதற்கும் அவள் ஏதாவது சண்டையிடுவாள் என்றெண்ணி அவராகவே அடுப்படிக்கு சென்று அடுப்பை பற்ற வைத்து வெண்ணீர் வைப்பற்காக சிறிய பாத்திரம் ஒன்றை தேடி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தார். தண்ணீர் மள மளவென்று கொதிக்கவும் அதை இறக்கி அடுப்பை அமர்த்தி விட்டு இறக்கிய பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு,வெளியே சென்று தன் மாத்திரைகளை எடுத்து வருவதற்குள்,அடுப்படிக்குள் நுழைந்த ஹரிஷ் வெண்ணீர் பாத்திரத்தை கை தவறி தள்ளி விட அது அவனின் காலில் கொட்டிட அலறினான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.