(Reading time: 16 - 31 minutes)

நிர்வாகி அவர் அருகில் சென்று, அம்மா உங்கள பார்க்க யார் வந்திருக்கான்னு பாருங்க இன்னைக்கு இந்த பையன்னுக்கு தான் பிறந்த நாள் இங்க இருக்கற எல்லாருக்கும் இனிப்பு, ஒரு வேளை உணவும் கொடுத்து, இந்த சின்ன வயசிலே அவனுக்கு தான் எத்தனை பெரிய மனசு பார்த்தீங்களா...? நீங்க அவனுக்கு ஏதோ பொம்மை கொடுக்கனும்ன்னு சொன்னீங்கல அதான் அவன் உங்கள பார்க்க வந்திருக்கான்.

உடனே அந்த முதியவள் இவன்புறம் திரும்பினாள், அவள் திரும்பியதுமே, ஹரிஷ் வேகமாக சென்று பாட்டி என்று கட்டிக் கொண்டான். என்ன பாட்டி நீ இவ்வளவு நாள் இங்கதான் இருந்தீயா ஏன் எங்கிட்ட சொல்லாமேலே போய்ட்ட, அப்பா உன்னை காணோம்ன்னு எங்க எல்லாமோ தேடி பார்த்தாங்க தெரியுமா..? நீ வீட்ட விட்டு போன இரண்டு நாளா அப்பா எதுமே சாப்பிடவே இல்ல தெரியுமா, என்று தன் மழலை ததும்பும் செல்லக் குரலில் சொன்னான் ஹரிஷ். ஏன் பாட்டி எங்க எல்லாம் விட்டு போய்ட்ட...? உங்களுக்கு அம்மாவையும் அப்பாவையும் பிடிக்கலையா பாட்டி அதான் வீட்ட விட்டு வந்துட்டிங்களா ..? என்று வெகுளித்தனமாக கேட்டான் ஹரிஷ்.

அப்படியெல்லம் இல்லடா கண்ணா.பாட்டி கொஞ்ச நாள் டூர் போய் இருந்தேண்டா கண்ணா, அதான் இங்க என்ன மாதிரியே நிறைய போர் இருக்காங்க அவங்கோளட கோயில் குளம்ன்னு போயிட்டு வந்தேன்.இன்னைக்கு உன்னோட பிறந்த நாள் இல்லையா அதான் நான் வந்திட்டேன்.

நான் இங்க வருவேன்னு உனக்கு எப்படி தெரியும் பாட்டி...?

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நீ இங்க வருவேன்னு உங்கப்பாதான் எங்கிட்ட சொன்னான். அதான் நான் உனக்கு ஒரு பொம்மை வாங்கிட்டு வந்தேன் என்று தன் பேரனுக்காக வாங்கி வைத்திருந்த பொம்மை ஒன்றை எடுத்து ஹரிஷிடம் நீட்டினாள், இந்தாடா கண்ணா உனக்கு இந்த பாட்டியோட பிறந்த நாள் பரிசு. வாங்கி பார்த்த ஹரிஷ் பாட்டி பொம்மை ரொம்ப அழகா இருக்கு. இருங்க பாட்டி அப்பாவும் அம்மாவும் இங்கதான் இருக்காங்க நான் போய் கூப்பிட்டு வர்றேன் என்று சிறுவன் வேகமாக ஓடினான்.

ஹரிஷை காணாமல் சிவாவும் சக்தியும் தேடிக் கொண்டு, இருந்த வேளையில் ஹோமின் நிர்வாகி அவர்களிடத்தில் தான் தான் ஹரிஷை அழைத்துச் சென்றதாகவும், உடல் நிலை சரி இல்லாத ஒருவருக்கு அவர் அறையில் சென்று இனிப்பு கொடுக்க அழைத்து சென்றதாகவும், அது மட்டுமில்லாமல் அந்த அம்மாளின் பேரனுக்கும் இன்று பிறந்த நாள் அதனால் உங்கள் பிள்ளைக்கு பரிசு கொடுக்க ஆசைப் பட்டார்கள் அதனால் தான் அழைத்துச் சென்றேன் என்று சொல்லி அவர்கள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

லட்சுமியம்மாளும் ஹரிஷும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாவும் சக்தியும் அறைக்குள் நுழைந்தனர்.

அப்பா நீங்களே வந்துட்டீங்களா இங்க பாருங்கப்பா நம்ம பாட்டி, இங்க தான் இருக்காங்க, பாட்டி இத்தனை நாள் டூர் போய் இருந்தாங்களாம். இன்னைக்கு என்னோட பிறந்த நாளுக்காக வந்திருக்காங்கப்பா. என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையிடம் பாட்டி கொடுத்த பரிசை காண்பித்தான்.

ஹ்ம்ம் சரிடா கண்ணா,

அம்மா..... என்னை மன்னிச்சிடுங்கம்மா.... கண்களில் கண்ணிருடன் சிவா தன் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

நான் உங்கள வீட்ட விட்டு வெளிய போக சொல்லியிருக்க கூடாது. நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கம்மா.என்றான். உடனே கிளம்புங்கம்மா நம்ம வீட்டுக்கு போகலாம். இனிமே நீங்க ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது என்றான். நீங்க இருக்க வீட்ல இருக்க இஷ்டம் இருந்தா இருக்கட்டும் இல்லன்னா அவ அவங்க அம்மா வீட்டுக்கே போகட்டும் என்றான் தன் மனைவியை பார்த்து முறைத்த படி.

என்னங்க நீங்க நான் இன்னும் அப்படியே இருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்களா.... நான் செய்த தப்பெல்லாம் உணர்ந்துட்டேன் என்ன மன்னிச்சுடுங்க அத்தை இனிமேல் உங்க மனசு கஷ்ட படறா மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். தயவு செய்து நீங்க வீட்டுக்கு வாங்க அத்தை என்ற சக்தியை ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் பார்த்தான் சிவா.

உங்க யார் மேலயும் எனக்கு கோபம் இல்லப்பா. நீங்க எப்பவும் சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும். நான் இங்க எந்த குறையும் இல்லாம் சந்தோஷமா தான் இருக்கேன். நீங்க இரண்டு பேரும் என்னை கூப்பிட்டதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் என்னோட பேரன் பிறந்த நாள் அன்னைக்கு அவன பார்க்கனும்ன்னு நினைச்சேன் பார்த்துட்டேன். அது போதும் எனக்கு. என் பையனும் என் மருமகளும் என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறி வந்து என்ன கூப்பிட மாட்டாங்களான்னு இது நாள் வரை இந்த உசிர பிடிச்சி வைச்ச்ிருந்தேன். இப்ப அது நடந்துருச்சி எனக்கு அது போதும் அது போதும் ...... என்று தன் மகனை கட்டிக் கொண்டு தன் உயிரை விட்டள் லட்சுமியம்மாள்.

தன் வாழ்வில் விடிவெள்ளியாய் முளைத்த அந்த பூ மரம் இன்று வேரோடு சரிந்து தன் இலைகளை உதிர்த்து விட்டதை உணர்ந்து அம்மா.... என்று கதறினான் சிவா

{kunena_discuss:785}

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.