(Reading time: 16 - 31 minutes)

சத்தம் கேட்டு வருவதற்குள் வெண்ணீர் கொட்டிய இடம் கொப்பளமாய் போக சிறுவன் வலியிலும் எரிச்சலிலும் அழத் தொடங்கினான். சிவாவும் சக்தியும் பதறி போய் விட்டார்கள் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருந்திட்டு அழைத்து வந்ததனர்.

என்னப்பா ஆச்சு ...? பரிதவிப்புடம் கேட்டாள் பாட்டி...

அவ்வளவுதான் சக்தி அலற தொடங்கி விட்டாள். எல்லாமே உங்களாளத்தான் ..? என்ன பாக்குறீங்க உங்கள யாரு அடுப்படிக்கு போய் இப்போ சுடுதண்ணீ வைக்க சொன்னா சரி வைச்சது தான் வைச்சிங்க அத அப்படியேவா இறக்கி வைக்கிறது சின்ன பிள்ளை இருக்க வீடாச்சே ஏதாவது ஒண்ணு கணக்கு ஒண்ணு ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க,,,?

இல்லமா உடம்புக்கு ரொம்ப முடியல அதான் கொஞ்சம் சுடுதண்ணி வைக்கலாமேன்னு ....

ஏன் பச்ச தண்ணி குடிச்சா என்ன செத்தா போய்டுவீங்க அப்படித்தான் போய் சேர வேண்டியதுதானே ஏன் இருந்து என் உயிர வாங்குறீங்க..? என்ற சக்தியின் கன்னத்தில் ஒரு அறை வைத்தான் சிவா.

என்னடி சொன்ன..?

இத்தனை நாள் இது மட்டும் தான் இல்லாம இருந்துச்சு இப்ப உங்கம்மாவுக்காக நீங்க என்ன அடிக்க ஆரம்பிச்சிடின்ங்க இல்ல..? ஏன் நிறுத்திடிங்க இன்னும் அடிங்க அடிச்சு கொல்லுங்க . நானும் என் பையனும் எப்படி போனா உங்களுக்கு என்ன வந்தது...? என்று அழுது கொண்டே உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.

அம்மா ... என்னை மன்னிச்சிடுங்கம்மா அவ இப்படியெல்லாம் பேசினதுக்கு நானும் ஒரு காரணாமாயிட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அறைக்குள் நுழைந்ததும் எழுந்து அமர்ந்த சக்தி, உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள் .

"என்ன ?"

இனிமேல் இந்த வீட்ல நான் இருக்கனும் இல்ல உங்கம்மா இருக்கணும் அத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றால் உறுதியாக.. இனிமேல் உங்கம்மாக்கு சேவை செய்த்துட்டு உங்ககிட்ட அடி வாங்கிட்டு என்னால் இந்த வீட்ல இருக்க முடியாது. உங்கம்மாவை நாளைக்கே கிராமத்துக்கு அனுப்பிடுங்க, அங்க தான் உங்களுக்கு சின்னதா ஒரு சொந்த வீடு இருக்கே அவங்க அங்க போகட்டும் என்றாள்.

சக்தி சொன்னதையே யோசித்த படி அப்படியே உறங்கி போனான் சிவா.

மேலும் இரண்டு நாட்கள் கடந்தது. அன்று ஞாயிற்று கிழமை சக்தி வழக்கம் காலையில் எழுந்து அனைத்து வேலைக்களையும் முடித்து விட்டு ஹரிஷை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். வாரா வாரம் ஞாயிறு என்றால் அம்மா அப்பா பிள்ளை என மூவரும் எங்காவது வெளியில் செல்வது வழக்கம்.இன்று சிவா செல்லவில்லை . சக்தியும் ஹரிஷும் மட்டும் சென்றனர்.

அவர்கள் சென்றதும், தம் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

அம்மா... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ...

என்னப்பா எங்கிட்ட என்ன தயக்கம் சொல்லுப்பா...?

இல்லம்மா வர வர சக்திக்கும் உங்களுக்கும் அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கு, அவகிட்ட எதும் என்னால பேசமுடியலம்மா அதான் உங்ககிட்ட பேசலாமேன்னு ....

ம்…... சொல்லுப்பா..

அம்மா கொஞ்ச நாளைக்கு நீங்க ,..... எனக்கு இத சொல்ல ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனால் இத விட்டா எனக்கு வேற வழி தெரியாதலால் தான்ம்மா சொல்றேன்,நீங்க நம்ம கிராமத்துல இருக்கற வீட்டுக்கு போய் தங்கி இருங்கம்மா. நான் உங்களுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்கிறேன். அதுக்குள்ள சக்தியும் கொஞ்சம் சமாதானம் ஆயிடுவா.அதுக்கப்புறம் நானே வந்து உங்கள கூட்டிடு வர்றேன். அது வரை நீங்க கொஞ்சம் சமாளிச்சு இருங்கம்மா என்றான் சிவா.

பேசிக் கொண்டிருந்த தன் மகனை பரிதாபமார் பார்த்தார் லட்சுமியம்மாள். சரிப்பா நான் நாளைக்கு போறேன்ப்பா என்றார்.

சிவா எதும் சொல்லாமல் அமைதியாய் எழுந்து சென்றான்.

மாலை சக்தி வந்ததுமே தன் அம்மாவை கிராமத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினான்.

றுநாள் காலை,

எப்போதும் போல் காலையில் எழுந்து பரபரப்புடன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தவனிடம் வந்து ஹரிஷ், அப்பா அப்பா பாட்டி ரூம்ல காணோம்ப்பா நான் வீடு புல்லா தேடிட்டேன் எங்கேயும் பாட்டி இல்லப்பா என்றதும் பதறிப் போய் எழுந்து வீடு முழுவதும் அலசினான். லட்ச்சுமியம்மாள் காணவில்லை, அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்தான் யாரும் தாங்கள் பார்க்க வில்லை என்று சொல்லிவிட்டனர்.என்ன செய்வதென்று தெரியாமல், ஆபிஸ்க்கு இரண்டு நாட்கள் விடுப்பு தெரிவிட்து இரண்டு நாட்களாக தேடி அலைந்தான். அலைந்தது தான் மிச்சம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அலுப்போடு வீடு திரும்பிய சிவாவிற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் ப்ரம் அட்ரஸ் இல்லாம் இருந்தது. உடனே அதை பிரித்து படித்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.