(Reading time: 16 - 31 minutes)

பிரியமான மகனுக்கு,

பாசமும் நேசமும் நிறைந்த உன் அம்ம எழுதுவது. நீ என்ன பற்றி கவலை பட வேண்டாம் நான் இங்கு ஒரு இடத்தில் மிகவும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். இந்த இரண்டு நாட்களாக நீ என்னைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் என்னை தேடி அலைந்திருப்பாய் அதற்காக என்னை மன்னிகவும். இங்கு வந்ததும் என்னால் உனக்கு கடிதம் எழுத முடியவில்லை. இப்போதும் கூட நான் சொல்வதை இங்கு என் கூட இருக்கும் ஒருவர்தான் எழுதுகிறார். என்னால் உனக்கும் உன் மனைவிக்கும் சண்டை எந்த பிரச்சனையும் வேண்டாம் என்றுதான் நான் இங்கு வந்து விட்டேன். நான் இருக்கும் இடத்தின் முகவரி கூட இக்கடிதத்தில் குறிப்பிட வில்லை. ஏனென்றால் நீ என்னை தேடி வருவது கூட சக்திக்கு பிடிக்காமல் போகலாம் அதானல் உங்களுக்கு எதும் சண்டை வந்து விடக் கூடாது என்று தான். நானே உனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறேன். எப்போது என் கடிதம் வர வில்லையோ அப்போது என் உயிர் இந்த மண்ணை விட்டு பிரிந்திருக்கும். அப்போது இங்குள்ளவர்களே உனக்கு தகவல் சொல்லியனுப்புவார்கள் அப்போது வந்து என்னுடைய இறுதி சடங்கை மட்டும் நீ நடத்தி விட்டு போ. இது தான் என்னுடைய கடைசி ஆசை..

அத்துடன் அக்கடிதம் முற்று பெற்றிருந்தது.

அம்மா... என்று கண்ணிர் விட்டு அழுதான் சிவா. அம்மாவிடம் இருந்து 3 மாதம் ஒரு முறை கடிதம் மட்டும் வந்து கொண்டே இருந்தது சிவாவிற்கு.

நாட்கள் கடந்தன....

ஹரிஷ்க்கு எட்டாவது பிறந்தநாள் வந்தது. தங்களுக்கு இருப்பது ஒரே பையன் என்பதால் ஒவ்வொரு பிறந்த நாளையும் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். சிவாவும் சக்தியும் அதே போல் இந்த முறையும் தன் பையனின் பிறந்த நாளை வெகு விமரிசயாய் கொண்டாட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த சக்தி, மாலை அலுவலகம் முடிந்து வந்ததும் இதைப் பற்றி தன் கணவனிடம் பேச ஆரம்பித்தாள். என்னங்க நம்ம பையனுக்கு எட்டாவது பிறந்த நாள் வருது நாம நம்ம ஆபிஸ் ஸ்டாப்ஸ், சொந்தகாரங்க எல்லாரையும் கூப்பிட்டு நல்லா கிராண்டா கொண்டாடனுங்க என்றாள்.

சொல்லிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சிவா, ஏன் சக்தி இப்படித்தானே எங்கம்மா என் மேல பாசமா இருந்திருப்பாங்க, சின்ன வயசுல எங்கப்பா இல்லாம என்ன எங்கம்மா எவ்வள்வு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பாங்க, என்னோட சின்ன சின்ன அசைவுகள்ல தானே எங்க அம்மா அவங்களோட உலகத்தை பார்த்து இருப்பாங்க, அப்படி பட்ட அம்மாவுக்கு நான் என்ன செஞ்சேன்....? உனக்கு எங்கம்மா பிடிக்காத ஒரே காரணத்துகாக நான் ஒதுக்கிட முடியுமா..? இப்ப கூட நான் உன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன் தெரியுமா நீ எங்கம்மா எனக்கு பார்த்து கட்டி வைச்ச பொண்ணுங்கிற ஒரே காரணத்துகாகத் தான். என்று கூறி விட்டு போன தன் கணவனைப் பார்த்தாள்.

ஆனால் ஹரிஷோ இந்த முறை தன் பிறந்த நாளை வீட்டில் கொண்டாட போவதில்லை என்றும், அனாதை ஆசிரம் அல்லது முதியோர் இல்லத்திலோ கொண்டாடுவதாக கூறினான் ..

என்னடா ஏன் அப்படி சொல்ற ..? - சக்தி

இல்லம்மா எங்க ஸ்கூல்ல டீச்சர் சொல்லிருக்காங்க நாம தினமும் நல்லா சாப்பிடறோம் நல்லா ட்ரெஸ் பண்றோம் ஆனா அவங்களுக்குன்னு யாருமே இல்லைன்னு, நாம பிறந்த நாளுக்கு செலவு பண்றத அங்க உள்ளவங்களுக்கு உபயோக படற மாதிரி ஒரு வேளை சாப்பாடு போட்டு கொண்டாடினா அவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும் நமக்கும் அவங்கள மாதிரியான பெரியாவங்க ஆசிர்வாதமும் கடவுளோட ஆசிர்வாதமும் கிடைக்கும்ன்னும் சொன்னாங்கம்மா.

அதனால எங்க ஸ்கூல்ல எல்லா பசங்களும் அவங்க பிறந்த நாளை அனாதை ஆசிரம், முதியோர் இல்லம் இப்படி இடங்களுக்கு தான் போய் கொண்டாறங்கம்மா இந்த என்னோட பிறந்த நாள் கூட நான் அப்படித்தான் கொண்டாட போறேன் என்றான் ஹரிஷ்.

ஹரிஷ் சொல்வதை கேட்டதும் சிவாவிற்கு தன் அம்மாவின் நினைவு வந்து விட்டது, இந்நேரம் அம்மாவும் ஏதாவது முதியோர் இல்லத்திலோ அல்லது அனாதை ஆசிரமத்திலோ தானே இருப்பார்கள் என்று இது நாள் வரை அவன் நினைத்து கொண்டிருந்தான். இப்போது தன் மகனின் பிறந்த நாளை இது போன்ற இடங்களில் கொண்டாடினால் அங்கு தன் தாயை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் தான் அவனுக்கு.

சொன்னாற்ப் போலவே ஹரிஷ் பிறந்த நாளை கொண்டாட அனாதை ஆசிரம் ஒன்றிற்கு சென்றாகள்.

அங்குள்ள அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து ஒரு வேளை உணவும் அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அந்த ஹோமிற்கு வந்த நேரம் முதல் சிவா தன் தாய் அந்த அங்கு இருக்க மாட்டார்களா என்று ஏக்கம் நிறைந்த கண்களோடு தேடினான் ஆனால் அவன் கண்களுக்கு லட்ச்சுமியம்மாள் தெபடவேயில்லை.

சற்று நேரத்தில் அந்த ஹோமின் உரிமையாளர் வந்து ஹரிஷிடம் வந்து தம்பி, இங்க ஒரு பாட்டி இருக்காங்க அவங்க பேரனக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாளாம் அவங்க பேரனுக்காக ஒரு பொம்மை வாங்கி வைச்சத உனக்கு கொடுக்கனும்ன்னு ஆசை படறாங்க, அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைப்பா நீ அவங்க இருக்கற ரூமுக்கு வறியா என்றார். உடனே ஹரிஷ் சரி என்று தலையசைத்து அவர்கள் பின்னே சென்றான்.

அங்கு சுவரை பார்த்தபடி ஒரு வயதான மூதாட்டி படுத்திருந்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.