"அதெல்லாம் சரி, தாத்தா! பொதுவா, எல்லார்க்கும் மாறி மாறி கோபம், ஆத்திரம், வருத்தம், சந்தோஷம், மன இறுக்கம், வரும்போது, நீமட்டும் எப்பவும் சிரிச்சிண்டே அமைதியா ஒரேமாதிரியா இருக்கியே, அது எப்படி முடியறது?"
"கண்ணா! அதை புரிஞ்சிக்க உனக்கு இன்னும் கொஞ்சம் அனுபவமாகணும். இப்ப சொன்னா புரியாது. கொஞ்சம் பொறுமையாயிரு! சரியா!"
பேரனின் முகம் சட்டென வாடியது!
தாத்தாவினால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை!
"இதுவும் உன் விளையாட்டோ?" என வானைப் பார்த்தவாறே, தாத்தா புலம்பிவிட்டு, பேரனை அணைத்து சமாதானப்படுத்தினார்.
" கண்ணா! சரி! வருத்தப்படாதே! நான் சொல்றதை புரிஞ்சிக்க இப்ப உன்னால முடியாதுன்னாலும், நீ தெரிஞ்சிக்கிறதிலே தப்பில்லே! சொல்றேன்.....ஆனா, ஒரே நேரத்திலே, முழுக்க சொல்லமுடியாது. பல தவணைகளிலே சொல்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
தனாலே, எனக்கு யாரிடமும் எதற்காகவும் எப்பொழுதும் எங்கேயும் சந்தோஷமா சிரித்து பேச பழகமுடிகிறது........"
பேரன் மட்டுமல்ல, மறைந்து கேட்டுக்கொண்டிருந்த பாட்டி, அப்பா, அம்மா எல்லோருமே, தாத்தா கூறியதிலுள்ள சத்தியம் தெளிவாகப் புரிந்தது!
{kunena_discuss:785}