"அரசு! எனக்கு உன் இரக்கம் புரியுது! ஆனா, மல்லிகா நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வேலை செய்கிற காரணத்துக்காக, அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் நல்ல வாழ்க்கை தரவேண்டிய பொறுப்பை நாம் ஏற்கமுடியுமா? உனக்கு பேங்கிலே சம்பளம் தராங்களே, அவங்க உன் குடும்பம் முழுவதற்கும் நல்ல வாழ்வு தர பொறுப்பை ஏற்றுக்கிறாங்களா? உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமே தருவார்கள். நாமும் மல்லிகாவுக்கு அதைத்தான் தருகிறோம். ஒரு மணி நேர உழைப்புக்கு, இருநூற்றுஐம்பது ரூபாய்னா, எட்டுமணி நேரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் ஒரு மாத்த்துக்கு தருகிறோம். நாலுவீட்டுலே, எட்டாயிரம்! படிப்பில்லாம, வெறும் பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி மொழுகிற வேலைக்கு வேற எவ்வளவு தருவாங்க, சொல்லு!"
அப்பப்பா! எத்தனை சாமர்த்தியமாக நாக்கை வளைத்து, உண்மையை திரித்து, பேசுகிறாள்! என்று கவியர
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
தமிழிடம் நியாயம் பேசினால் பயனில்லை என முடிவெடுத்தான்.
ஒருநாள் கேளிக்கைக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்ய தயாராயிருப்பவளால், வேலைக்காரிக்கு மாதம் இருநூறு ரூபாய் கூடக்கொடுக்கமுடியாதா? என்று அவன் தமிழிடம் கேட்டால், அவளுடைய பதிலை காது கொடுத்துக் கேட்கமுடியாதென்று அவனுக்கு தெரியும்.