அவன் யோசிக்கத் தொடங்கினான்.
அவனுடைய முதல் விருப்பம், குறிக்கோள், வீடுகளில் வேலை செய்து வயிறு கழுவும் பரம ஏழைகளின் இருண்ட வாழ்வில் சிறிதாவது ஒளி பிறக்கவேண்டும், என்பதே!
இரவில், தமிழரசி நிம்மதியாக தூங்குகிற நேரத்தில், கவியரசன் தூக்கமின்றி, இந்த குறிக்கோளைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பான், பல நாட்கள்!
இறுதியில், ஒரு திட்டம் மனதில் உருவாகியது.
அவனால், நாட்டிலுள்ள அனைத்து வீட்டுவேலை ஊழியர்களின் வாழ்வை உயர்த்தமுடியாது, ஏன், அந்த நகரத்தின், பகுதியின், தெருவின் ஊழியர்களின் வாழ்வைக்கூட உயர்த்துவது இயலாது. அவன் வாழ்கிற அந்த பெரிய ஹவுஸிங் காம்ப்ளெக்ஸில் மட்டுமாவது, முயற்சிக்க முனைந்தான்.
மொத்தம் நூறு அபார்ட்மெண்ட் உள்ளன. வசிப்பவர்கள் அனைவருமே வசதியானவர்கள். ஒரு வேலைக்காரி நான்கு வீடுகளில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லோரும் ஒட்டுமொத்தமா சொன்ன ஒரே வார்த்தை, 'நாங்க நல்லாயிருக்கிறதுக்காக பாடுபடற உங்களை காட்டிக்கொடுத்து எச்சில்சோறு திங்கிறதைவிட, எங்க பிள்ளைங்களுக்கும் கொடுத்து, நாங்களும் விஷத்தை குடிச்சு உயிரை விடுவோங்க' என்பதுதான். நான் ஏழைகளை நம்பறேன், ஏன்னா நானும் ஒரு ஏழை! நீங்க நிம்மதியாயிருங்க! போங்க!"